நச். இஃது இன்பமும் இன்ப நிலையின்மையுமாகி புணர்தல் பிரிதல் கூறிய முறையானே இயற்கைப் புணர்ச்சி முற்கூறி1 அதன் பின்னர்ப் பிரிதலும் பிரிதனிமித்தமுமாய் அத்துறைப்படுவன வெல்லாந் தொகுத்துத் தலைவற்கு உரியவென்கின்றது. (இ-ள்) : முன்னிலையாக்கல் - முன்னிலையாகாத வண்டு, நெஞ்சு முதலியவற்றை முன்னிலையாக்கிக் கோடல். சொல்வழிப் படுத்தல்-அச்சொல்லாதவற்றைச் சொல்லுவன போலக்கூறுதல், நன்னயம் உரைத்தல்-அவை சொல்லுவனவாக அவற்றிற்குத் தன் கழிபெருங்காதல் கூறுவானாய்த் தன்னயப்புணர்த்துதல். நகைநனி உறாஅது அந்நிலை அறிதல்-தலைவி மகிழ்ச்சி மிகவும் எய்தாமற் புணர்ச்சிக்கினமாகிய பிரிவு நிலை கூறி அவள் ஆற்றுந் தன்மை அறிதல். மெலிவு விளக்குறுத்தல்-இப்பிரிவால் தனக்குள்ள வருத்தத்தைத் தலைவி மனங் கொள்ளக் கூறுதலுந் தலைவி வருத்தங் குறிப்பான் உணர்ந்து அது தீரக் கூறுதலும். தம்நிலை உரைத்தல்-நின்னோடுபட்ட தொடர்ச்சி எழுமையும் வருகின்றதெனத் தமது நிலை உரைத்தல். தெளிவு அகப்படுத்தல்-நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன், பிரியின் அறனல்லது செய்தேனாவலெனத் தலைவி மனத்துத் தேற்றம்படக் கூறுதல். என்று இன்னவை நிகழும் என்மனார் புலார்-என்று இக்கூறிய ஏமும் பயின்று வரும் இயற்கைப் புணர்ச்சிப்பின் தலைவற்கு என்றவாறு. முற்கூறிய மூன்றும் நயப்பின் கூறு. இஃது அறிவழிந்து கூறாது தலைவி கேட்பது காரியமாக வண்டு முதலியவற்றிற்கு உவகை பற்றிக் கூறுவது. ‘நன்னயம்’ எனவே எவரினுந் தான் காதலனாக உணர்த்தும். இதன் பயன்: புணர்ச்சியெய்தி நின்றாட்கு இவன் எவ்விடத்தான் கொல்லோ இன்னும் இது கூடுங்கொல்லோ இவன் அன்புடையன் கொல்லோ என நிகழும் ஐயம் நீங்குதல். இது பிரிதனிமித்தம். இவன் பிரியாவிடின் இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாம். ஆண்டு யாம் இறந்துபடுதலின் இவனும் இறந்துபடுவனெனக் கருதப் பிரிவென்பதும் ஒன்று உண்டெனத் தலைவன் கூறுதல் அவட்கு மகிழ்ச்சியின்
1. இச்சூத்திரம் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர் நிகழ்வனவற்றைக் கூறுவதாக நச்சர் கூறினார். இளம்பூரணர் முன்னர் நிகழ்வனவாகக் கூறினார். பின்னவர் கூற்றே சிறக்கும். |