பக்கம் எண் :

களவியல் சூ. 1071

றென்பது தோன்ற ‘நகை நனியுறாது’ என்றார். ‘புணர்தல் பிரிதல்’ (14) எனக் கூறிய சூத்திரத்திற் புணர்தலை முற்கூறி ஏனைப் பிரிவை ‘அந்நிலை’ என்று ஈண்டுச் சுட்டிக் கூறினார். இதனால் தலைவிக்குப் பிரிவச்சங் கூறினார். தண்ணீர் வேட்டு அதனை உண்டு உயிர் பெற்றான் இதனான் உயிர் பெற்றே மெனக் கருதி அதன் மாட்டு வேட்கை நீங்காதவாறு போலத் ‘தலைவி மாட்டு வேட்கையெய்தி அவளை அரிதிற்கூடி உயிர் பெற்றானாதலின் இவளான் உயிர் பெற்றேமென்றுணர்ந்து அவன் மேல் நிகழ்கின்ற அன்புடனே பிரியுமாதலின் தலைவற்கும் பிரிவச்சம் உளதாயிற்று. இங்ஙனம் அன்பு நிகழவும் பிறர் அறியாமற் பிரிகின்றேனென்பதனைத் தலைவிக்கு மணங் கொள்ளக் கூறுமென்றற்கு ‘விளக்குறுத்தல்’ என்றார். இதனானே வலியுறுத்தல் பெற்றாம். அஃது அணித்து எம்மிட மென்றும் பிறவாற்றானும் வற்புறுத்தலாம். மேலனவும் பிரிதனிமித்தம்.

(உ-ம்)

“கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற்றரிவை கூந்தலி
னறியவுமுளவோ நீயறியும் பூவே” 1      (குறுந்-2)

இதனுள் ‘தும்பி’ என்றது முன்னிலையாக்கல்; ‘கண்டது மொழிமோ’ என்றது சொல்வழிப்படுத்தல்; ‘கூந்தலின் நறியவும் உளவோ’ என்றது நன்னயமுரைத்தல். ‘காமஞ்செப்பாது’ என்றது என்னிலத்து வண்டாதலின் எனக்காகக் கூறாது மெய் கூறெனத் தன்இடம் அதுவாகக் கூறலின் இடணித்தென்றது; ‘பயிலியது நட்பு’ என்றது தந்நிலை யுரைத்தல்.


1. கருத்து: நாளும் பூவில் தேனைத் தேர்ந்துண்டு வாழும் தும்பியே! என் வினாவுக்கு என்னிடம் கொண்ட அன்பால் ஒருதலைப் பக்கமாக விடைகூறாது உண்மையிற் கண்டதைக் கூறுக. நட்பினையும் மயிலியலையும் எயிற்றினையும் உடைய இவ்வரிவை கூந்தலைப்போல நீயறியும் பூக்களில் நறுமணம் உள்ள பூக்களும் உண்டோ.