இது நயப்பும் பிரிவச்சமும் வன்புரையுங் கூறிற்று. “யாயு ஞாயும் யாராகியரோ வெந்தையு நுந்தையு மெம்முறைக்கேளிர் யானு நீயும் எவ்வழி யறிதுஞ் செம்புலப் பெய்ந் நீர்போல வன்புடை நெஞ்சந் தாங்கலந்தனவே” 1 (குறுந்-40) இது பிரிவரெனக் கருதிய தலைவி குறிப்புணர்ந்து தலைவன் கூறியது. “மெல்லிய லரிவை நின்னல்லகம் புலம்ப நிற்றுறந்தமை குவெனாயி னெற்றுறந் திரவலர் வாரா வைகல் பலவாகுக யான் செலவுறு தகவே2 (குறுந்-137) “அறத்தா றன்றென மொழிந்த தொன்றுபடுகிளவி யன்னவாக வென்னுநள் போல3 (அகம்.5-16-8) இவை தெளிவகப்படுத்தல். “அம்மெல்லோதி விம்முற்றழுங்கல் எம்மலை வாழ்நரிரும் புனம்படுக்கிய அரந்தின் நவியறுத் துறத்த சாந்தநும் பரந்தேந் தல்குற் றிருந்து தழையுதவும் பண்பிற்றென்ப வண்மையதனாற் பல்கால் வந்து நம்பருவரறீர
1. கருத்து: தலைவீ! என் தாயும் நின் தாயும் யார்? எம் தந்தையும் நின் தந்தையும் என்னவுறவுடையர்? யானும் நீயும் இதற்கு முன்னர் எவ்விடத்துப் பார்த்தறிவோம்? செம்புலமாகிய மலையிடத்து வெவ்வேறிடத்துப் பெய்த மழைநீர் வீழ்ந்து ஓரிடத்துக் கலப்பதுபோல நம் இருவர் நெஞ்சமும் கலந்தன. 2. கருத்து: அரிவையே! நின் நல்லகம் தனிமைப்பட நின்னைப் பிரிவேனாயின் யான் மேற்கொள்ளும் தக்க வாழ்வில் என்பால் இரவலர் வாராத நாள்கள் பலவாகுக. 3. கருத்து: கூடினரைப் பிரிதல் அறநெறியன்று எனக் கூறிய பழஞ்சொல் அப்படி கிடக்கட்டும் என்பவள்போல, |