பக்கம் எண் :

பொருளதிகாரம்155

இ--ள் : உள்ளுறையுவமை ஐந்துவகையெனக் கூறுவர் புலவர் என்றவாறு.

அவையைந்துமாமாறு 1முன்னர்ச் சொல்லுதும். இதனது பயம் ஏனையுவமத்திற்கு நிலைக்களம் ஐந்து ஓதினான், அவ்வாறே இதற்கு நிலைக்களம் ஓதாது அவைபோறலின் அவையே நிலைக்களமாமென்றலும் ஏனையுவமத்துள்2ஒரு சாதியோடு ஒரு சாதியினை உவமித்தல் வழக்கன்றாயினும் உள்ளுறையுவமத்திற்கு அமையுமென்றலுமென்பது.

(24)

[மேற்கூறிய உள்ளுறை ஐந்து இவையெனல்]

300. தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின்
வினையினும் பயத்தினு முறுப்பினு முருவினும்
பிறப்பினும் வரூஉந் திறத்திய லென்ப.

இது மேற்கூறிய ஐந்தும் இவையென்கின்றது.

இ--ள் : வினை பயன் மெய் உருவென்கின்ற நான்கினானும் பிறப்பினானும் வரும் மேற்கூறிய ஐந்தும் என்றவாறு.

உறுப்பென்றது மெய்யினை; உடம்பினை உறுப்பென்பவாகலானும் மெய்யுவமமெல்லாம் உறுப்பினையேபற்றி வருதல் பெரும்பான்மைய வென்றற்கும் அவ்வாறு கூறினானென்பது. ‘தவலருஞ் சிறப்பி னத்தன்மை நாடின்’ என்றதனான் ஏனையுவமத்தினும் உள்ளுறையுவமமே செய்யுட்கும் பொருளிலக்கணத்திற்குஞ் சிறந்ததென்பது.

அவை வருமாறு:-

“கரும்புநடு பாத்திக் 3 கலித்த தாமரை
 சுரும்புபசி களையும் பெரும்புன லூர
 புதல்வ னீன்றவெம் 4முயங்க
 லதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே.”

(ஐங்குறு. 65)

என்பது வினையுவமப் போலி; என்னை? தாமரையினை விளைப்பதற்கன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுட் தானே விளைந்த தாமரை சுரும்பின் பசிதீர்க்குமூரனென்றான். இதன்


1. முன்னர் என்றது வருஞ் சூத்திரத்தை.

2. சாதி--பிறப்பு என்பது பேராசிரியர் கொண்ட கருத்து. என்னை? பின் பிறப்பென வருதலின் 307-ம் சூத்திர உரை நோக்குக.

3. கலித்த--முளைத்த.

4. முயங்கல்--தழுவற்க.