பக்கம் எண் :

பொருளதிகாரம்169

[பொருளே யுவமஞ்செய்தனர்] ‘மொழியினு’ (284) மென்றதனாற் பொருளினை உவமையாகக் கூறாது, உள்ளுறையுவமம் போலக் கொள்ளவைத்துப் பின்னர் உவமத்திற்கு அடையாயவற்றுள், ‘வையங் காவலர் வழிமொழிந் தொழுக’ என்றான். வழிமொழித லென்பது வேற்றரசர்க்குத் தன்றன்மையென வேறின்றித் 1தன்னகப்படுத்தல். ஆகலான் தத்த மொளியொடு 2படுத்து ஒழிந்த கோளுஞ் செல்லத் தானுஞ் செல்லும் மதியமென்று எதிர்மறுத்துக் குற்றங் கூறுங் குறிப்புப்பட வைத்தானென்பது. ‘போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாது’ எனவே இன்ப நுகர்வுமுற்றுச் சிறப்பில்லாக் 3கட்டுரை யெய்தானெனவும், அவனோடு உவமிக்கின்ற மதியமாயின் இருபத்தெழுவர் மகளிரொடு போகந் துய்த்துச் சிறப்பில்லாத கட்டுரை புனையுமென்றும் எதிர் மறுத்துக்கொள்ள வைத்தான். சிறப்பின்மை யென்பது, எல்லார்க்கும் ஒத்தவாற்றான் அறஞ் செய்யாது, உரோகணிமேற் கழிபெருங் காதலனெனப்படுதல் போல்வன.

“இடஞ்சிறி தென்னு மூக்கந் துரப்ப.”

எனவே, எஞ்ஞான்றுந் தன்னெல்லைக்கண்ணே வரும், மதிமண்டிலமென்று எதிர்மறுத்துக் கொள்ளப்படும்.

“ஒடுங்கா வுள்ளம்”

எனவே, அம்மதியந் தேய்ந்தொடுங்குமென்பது கொள்ளப்படும்.

“ஓம்பா வீகை”

எனவே, நாடோறும் ஒரோவோர் கலையாகப் பல்லுயிர்க்கும் இன்பம் பயக்குமாற்றாற் றருவதல்லாது தானுடையவெல்லாம் ஒருகாலே கொடாத மதியமெனப்படும். ‘கடந்தடு தானை’ எனவே, மதிக்குத் தானையாகிய தாரகையெல்லாம் பகைக்கதிராகிய பருதி மண்டிலத்துக்குத் தோற்குமென்றானாம். இவ்வாற்றான் உவமான அடையெல்லாம் எதிர்மறுத்துக் கொள்ளப்பட்டன.

இனிப் பொருட்குரிய அடையும் அவ்வாறே எதிர்மறுத்துக் கொள்ளப்படுமென்றவாறு. விலங்குசெலன் மண்டிலமெனவே,


1. தன்னகப்படுத்தல்--தன்னுட்படுத்தல்.

2. படுத்து--பொருந்தச்செய்து. படடு என்றிருப்பது நலம். ஒழிந்தகோள்--தன்னையொழிந்த கிரகங்கள்.

3. கட்டுரை--வார்த்தை; பேச்சு.