என்பது, நெஞ்சினை வேறு நிறீஇக் கூறினமையிற் 1பிறன்கட் டோன்றிய பிணியெனப்படும். இதனுள், “சேய ளரியோட் 2படர்தி” என்றமையின் இது பிறன்கட்டோன்றிய. வருத்தமும் வந்த தாயிற்று. 3”யான்ற னறிவ றானறி யலளே.” குறு.-337) என்பது, தன்கட்டோன்றிய வருத்தம்பற்றி வந்த இளிவரல்; என்னை? அது பின்னின்ற தலைமகன் கூறியதாகலின். “ஒன், றிரப்பான்போ லிளிவந்துஞ் சொல்லும்” (கலி-47) என்பது பிறன்கட்டோன்றிய 4வருத்தம்பற்றி வந்தது; என்னை? அவன் இவ்வாறொழுகுதல் நமக்கு இளிவரலாமென்னுங் குறிப்பினாற் கூறிக் குறை நயப்பித்தமையின். “வலியரென 5வழிமொழியலன் மெலியரென மீக்கூறலன்.” (புறம்-239) எனத் தன்கண்ணும் பிறன்கண்ணுந் தோன்றிய மென்மைபற்றி இளிவரல் பிறந்தன; என்னை? மெலியார் இளிவந்தன கூறுவராயினும் வலியார் மீக்கூறுவராயினும் இவன் அவை செய்யா னென்றலின். 6”ஒருகை யுடைய தெறிவலோ யானு மிருகை சுமந்துவாழ் வேன்.” (ப-207)
1. பிறன் என்றது நெஞ்சினை. 2. படர்தி என்றது விரும்புகின்றாய் என்றபடி. விரும்புதல் பற்றி முயற்சிபற்றி வந்ததென்றார். 3. யான், அவள் வருத்தும் பருவமுடையள் என்பதை அறிவேன். எனவே இளையள் விளைவிலள் என்னாதி; என்னை வருத்தும் பருவம் உடையள் என இரந்து பின்னின்ற தலைமகன் கூறினமையின் தன்கட்டோன்றிய வருத்தமாயிற்று. இரந்து பின்னிற்றல்--வருத்தம் (முயற்சி); இதனால் அவற்கு இளிவரல் பிறந்தது. 4. இரப்பான்போல் இளிவந்து கூறல்--வருத்தம் (முயற்சி). 5. வழிமொழியலன் என்பது--தன் மென்மைதோன்ற நின்றது. மெலியர் என்பது பிறர் மென்மைதோன்ற நின்றது. 6. ஒரு கையுடையது--யானை. எறிவலோ என்றமையான். எறிதல் வீரத்திற்கு இழுக்காகும் என்றபடி. |