பக்கம் எண் :

24மெய்ப்பாட்டியல்

கால்வண்ண மல்லாற் கடுமான்றேர்க் கோதையை
மேல்வண்ணங் கண்டறியா வேந்து.”

(இ-வி-ப-124)

இஃது, 1இறைபொருளாக அச்சம் பிறந்தது.

பிணங்காத அச்சமென்னாது ‘சாலா அச்சம்’ என்ற மிகையான் இந் நான்குமேயன்றி ஊடன் முதலியனவும் அச்சத்திற்குப் பொருளாமென்று கொள்க.

“சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவனின்
2னாணை கடக்கிற்பா ரியார்.

(கலி-81)

என்பது, புலவி பொருளாக அச்சம் பிறந்தது.

“அணிகிளர் சாத்தி னம்பட் டிமைப்பக்
 கொடுங்குழை மகளிரி 3னொடுங்கிய விருக்கை.”

(அகம்-236)

“அச்சா றாக வுணரிய வருபவன்
 4பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னாகுவல்.”

(கலி-75)

என வருவனவும் அவை. பிறவும் அன்ன.

(8)

[பெருமிதச்சுவை இத்துணையது எனல்]

257. கல்வி தறுகண் ணிசைமை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமித நான்கே.

இஃது, ஆறாம் எண்ணு முறைமைக்கண் நின்ற வீரம் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : கல்வியும் 5தறுகண்மையும் புகழும் கொடையு மென்னும் நான்கும்பற்றி வீரம் பிறக்கும் என்றவாறு.

இச்சூத்திரத்துள் வீரத்தினைப் பெருமிதமென்றெண்ணினான்; என்னை? எல்லாரொடும் ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமிதமெனப்படும் என்றற்கென்பது.


1. இறை--அரசன்.

2. ஆணை கடக்கிற்பார் யார் என்றமையின் அச்சமாயிற்று. புலவி--ஊடல்.

3. ஒடுங்கிய இருக்கை என்றது, ஊடற்கஞ்சி மகளிர்போல் அவன் ஒடுங்கியிருக்கின்ற இருக்கை.

4. பொய்ச்சூள்--பொய்ச் சத்தியம்.

5. தறுகண்மை--அஞ்சாமை.