கல்வியென்பது, தவமுதலாகிய விச்சை, தறுகணென்பது, அஞ்சுதக்கன கண்ட இடத்து அஞ்சாமை. இசைமையென்பது, இன்பமும் பொருளும் இறப்பப்பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை. கொடையென்பது, உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளுங் கொடுத்தல். உதாரணம்: 1”வல்லார்முற் சொல்வல்லே னென்னைப் பிறர்முன்னர்க் கல்லாமை காட்டி யவள்.” (கலி-141) என்பது, கல்விபற்றிய பெருமிதம்; என்னை? என்னையுங் கல்லாமை காட்டினாளெனத் தன் பெருமிதங் கூறினமையின். 2”அடன்மாமே லாற்றுவே னென்னை மடன்மாமேன் மன்றம் படர்வித் தவள்.” (கலி-141) என்பது தறுகண். “கழியாக் காதல ராயினுஞ் சான்றோர் 3பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்.” (அகம்-112) என்பது புகழ். “வையம், புரவூக்கு முள்ளத்தே னென்னை யிரவூக்கு மின்னா விடும்பைசெய் தாள்.” (கலி-141) என்பது கொடை. “தன்னகம் பக்க குறுநடைப் புறவின் றபுதிகண் டஞ்சிச் 4சீரை புக்க வரையா வீகை யுரவோன் மருக.” (புற-43) என்பதுமது. ‘சொல்லப்பட்ட பெருமிதம்’ என்றதனாற் காமம்பற்றியும் பெருமிதம் பிறக்குமென்று கொள்க.
1. வல்லார் முற் சொல்வல்லேனாகிய என்னை என்றது கல்வி பற்றிய பெருமிதம். 2. அடன்மாமேலாற்றுவேன் என்றது தறுகண் பற்றிய பெருமிதம். 3. பழியொடு வரூஉ மின்பம் வெஃகாமை--புகழ்பற்றிய பெருமிதம். 4. சீரை--துலைக்கோற்றட்டு. சீரைபுக்கது--கொடைபற்றிய வீரம். |