பக்கம் எண் :

பொருளதிகாரம்27

 “நின்மகன்,
  படையழிந்து மாறின னென்றுபலர் கூற
  மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென்
  முலையறுத் திடுவென் யானெனச் சினைஇ.”

(புற-278)

என்பது, குடிகோள்பற்றி வந்த வெகுளி; என்னை? தன்மகன் மறக்குடிக்குக் கேடு சூழ்ந்தானென்று சினங்கொண்டாளாகலின்.

1”நெருந லெல்லைநீ யெறிந்தோன் றம்பி
  யகற்பெய் குன்றியிற் சுழலுங் கண்ணன்.”

(புறம்-300)

என்பதுமது.

2”வரிவயம் பொருத வயக்களிறு போல
  வின்னு மாறாது சினனே.”

(புறம்-100)

என்பதனுள், அலைபற்றிச் சினம் பிறந்தது; என்னை? புலியான் அலைக்கப்பட்ட யானை பொருது போந்தும் அவ்வலைப்புண்டலை நினைந்து சினங்கொள்ளா நின்ற தென்றமையின்.

“உறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச்
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை.”

(புற-72)

என்பது, கொலைபொருளாக வெகுளிச் சுவை பிறந்தது; என்னை? சிறு சொற் சொல்லுதலென்பது, புகழ்கொன்றுரைத்தலாகலின்.

“செய்தவ றில்வழி யாங்குச் 2சினவுவாய்.”

(கலி-87)

என்பது, ஊடற்கண் 4தலைமகள் வெகுட்சி கூறியது. பிறவுமன்ன.

இன்னும் அவ்விலேசானே,

“நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை.”

(புற-125)


1. நேற்றுப் பகல் நீ யெறிந்தவனுடைய தம்பி, தமது குடியிலுள்ள தமையனைக் கொன்றமையின் குன்றிபோலச் சிவந்து சுழலுங் கண்ணனாயினான் என்றமையின் இது குடிகோள்பற்றி வந்த வெகுளி. குன்றி--குன்றுமணி, அகல்--மண்ணாலாயினும் உலோகங்களினாலாயினுஞ் செய்யப்படும் ஒருவகைச் சிறிய பாத்திரம். அது கண்ணின்வடிவிற் குவமை.

2. வரிவயம்--வரி பொருந்திய புலி.

3. சினவல்--வெகுளல்.

4. தலைமகள் வெகுட்சி--ஆறாம் வேற்றுமைத்தொகை.