பக்கம் எண் :

28மெய்ப்பாட்டியல்

என்றாற்போலச் சினமில்லதனை உள்ளதுபோலக் கூறுவனவுங் கொள்ளாமோவெனின், உணர்வுடையனவற்றுக் கல்லது சுவை தோன்றாமையின் வெகுளியென்று ஈண்டுக் கூறப்படாவென்பது. 1இது பிறன்கட் டோன்றிய பொருள்பற்றி வரும்.

(10)

[உவகைச்சுவை இத்துணையது எனல்]

259. செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்
றல்ல னீத்த வுவகை நான்கே.

இஃது, ஈற்றுக்கண்ணின்ற 2உவகை உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : செல்வமென்பது, நுகர்ச்சி; புலனென்பது, கல்விப் பயனாகிய அறிவுடைமை; புணர்வென்பது, காமப்புணர்ச்சி முதலாயின; விளையாட்டென்பது, ‘யாறுங் குளனுங் காவுமாடிப் பதியிகந்து வருதன்’ (191). முதலாயின. இவை நான்கும் பொருளாக உவகைச்சுவை தோன்றும் என்றவாறு.

உவகையெனினும் மகிழ்ச்சியெனினும் ஒக்கும்.

“உரனுடை யுள்ளத்தை செய்பொருண் முற்றிய
 வளமையா னாகும் பொருளிது வென்பாய்.”

(கலி-12)

என்புழி, வளமையா னாகும், மனமகிழ்ச்சி இதுவெனக் கூறினமையின், இது செல்வம் பொருளாகப் பிறந்த உவகையாம்.

“நன்கலம் பெற்ற வுவகையர்.”

என்பதும் அது.

“பெண்டிர் நலம்வௌவித் தண்சாரற் 2றாதுண்ணும்
 வண்டிற் றுறப்பான் மலை..”

(கலி-40)

என்பது, அறிவு பொருளாக உவகை பிறந்தது; என்னை? ‘முகைப்பதம் பார்க்கும் வண்டுபோலத் தலைவியரை நகைப்பதம் பார்க்கும் அறிவுடைமை’காமத்திற்கு ஏதுவாமாகலின்.


1. இது--வெகுளி.

2. உவகைப் பொருள்களை “ஒத்தகாமத்தொருவனும்......ஏக்கழுத்தம்மே” என்னுஞ் செயிற்றியனார் சூத்திரம் நோக்கி யறிக.. (இளம்பூரணருரை).

3. தாதுண்ணும் வண்டினென்றமையான் நகைப்பதம் பார்த்தல் பெறப்பட்டது. நகைப்பதம்--தன்னொடு நகும் பருவம்.