பக்கம் எண் :

604செய்யுளியல்

[தாவண்ணம் இதுவெனல்]

527. தாஅ வண்ண
மிடையிட்டு வந்த வெதுகைத் தென்ப.

இ--ள் : இடையீடுபடத் தொடுப்பது தாஅவண்ணம் என்றவாறு.

அவை: பொழிப்பும் ஒரூஉவுமாகலின் எதுகையென வரைந்து கூறினானென்பது; அடியிடையிட்டு வருவது தொடை வேற்றுமையாவதல்லது வண்ண வேற்றுமையாகாதென்பது. ஒரு செய்யுளுட் பல அடி வந்தால் அவை எல்லாம் இடையிட்டுத் தொடுத்தல்வேண்டுமோவெனின், வேண்டா; அவை வந்தவழித் தாஅவண்ணமெனப்படுமென்பது; எனவே, இவ்வண்ண வகைகளெல்லாஞ் செய்யுண் முழுவதுமே பெறுவனவாகக் கொள்ளக் கிடந்தனவல்ல; இவற்றை உறுப்பென்ற தன்மையாற் கந்திருவ நூலார் வண்ணங் கூறியவாறுபோல ஒரு செய்யுளுட் பலவும் வரப்பெறுமென்பதாம்; அவை,

“உலக முவப்ப வலனேர்பு திரிதரு.”

(முருகு. 1)

எனவும்,

“உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை.”

(ஐங்குறு. ப. 143)

எனவும் வரும். பிறவுமன்ன.

(215)

[வல்லிசைவண்ணம் இதுவெனல்]

528.வல்லிசை வண்ணம் வல்லெழுத்துப் பயிலும்.

இ--ள் : வல்லிசை வண்ணம் வல்லெழுத்துப் பயின்றுவரும் என்றவாறு.

வல்லெழுத்துப் பயின்றுவருதலான் அப்பெயர்த்தாயிற்று.

“முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்.”

(பட். 218)

எனவும்,

“முட்டாட் டாமரைத் துஞ்சி.”

(முருகு. 73)

எனவும் வரும். பிறவும் அன்ன.

(216)

[மெல்லிசை வண்ணம் இதுவெனல்]

529. மெல்லிசை வண்ண மெல்லெழுத்து மிகுமே.

இ--ள் : மெல்லெழுத்து மிகுவது மெல்லெழுத்து வண்ணம் என்று கூறியவாறு.