ஒருசெய்யுண் முழுவதும் ஓரினத்தெழுத்தே பயிலச்செய்தால் இன்னாதாதலின் இவை 1உறுப்பெனப்பட்டு இடையிட்டு வருமென்றானென்பது. 2அவ்வாறு செய்யின் அவை 3மிறைக் கவியெனப்படும். ஒழிந்த எழுத்திற்கும் இஃதொக்கும். “பொன்னி னன்ன புன்னைநுண் டாது.” (யா. வி. ப. 382) என மெல்லெழுத்துப் பயின்றவாறு. (217) [இயைபுவண்ணம் இதுவெனல்] 530. | இயைபு வண்ண மிடையெழுத்து மிகுமே. |
இ--ள் : இடையெழுத்து மிகுவது இயைபுவண்ணம் என்றவாறு. “அரவி னதிர வுரீஇய வரகுகதிரின்.” என இடையெழுத்து மிக்குவந்தமையின் இயைபுவண்ணமாயிற்று. மென்மை வன்மைக்கு இடைநிகர்வாகிய எழுத்தான் வருதலின் இயைபுவண்ண மென்றான். (218) [அளபெடை வண்ணம் இதுவெனல்] 531. | அளபெடை வண்ண மளபெடை பயிலும். |
இ--ள் : 4இரண்டளபெடையும் பயிலச் செய்வன அளபெடை வண்ணமாம் என்றவாறு. “மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்.” (அகம். 99) என்பது, அளபெடை வண்ணம். “கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும்.” (மலைபடு. 352) என்பதும் அது. (219) [நெடுஞ்சீர்வண்ணம் இதுவெனல்] 532. | நெடுஞ்சீர் வண்ணநெட் டெழுத்துப் பயிலும். |
இ--ள் : நெட்டெழுத்துப் பயின்று வருவது நெடுஞ்சீர் வண்ணம் என்றவாறு. அது, “மாவா ராதே மாவா ராதே.” (புறம். 273) என்பது, நெடிதாய் வருவது நெடுஞ்சீரெனப்பட்டது. (220)
1. உறுப்பு--அங்கம். அஃதாவது மெல்லெழுத்து மிகுதியும் வந்து சொற்கு உறுப்பாதல். எனவே வெறெழுத்தும் அவற்றோடு கூடிவரும் என்க. 2. அவ்வாறு பயிலச் செய்தல்--ஓரினமே பயிலச் செய்தல். 3. மிறைக்கவி--சித்திரகவி. 4. இரண்டு--உயிர், மெய். |