பக்கம் எண் :

பொருளதிகாரம்615

தொகை முதலாகிய தொகை யெட்டுமென்றவாறு. அழகு, செய்யுண்மொழி யென்றதென்னையெனின்,--அது பெரும்பான்மையாற் கூறினான். அம்மொழியானே இடைச்சங்கத்தாரும் கடைச்சங்கத்தாரும் இவ்விலக்கணத்தாற் செய்யுள் செய்தார்; இக் காலத்துச் செய்யினும் விலக்கின்றென்பது. மற்று மூவடி முப்பது முதலாயின அம்மையெனப்படுமோ அழகெனப்படுமோவெனின்,--தாயபனுவலின்மையின் அம்மையெனப்படா வென்பது. இவற்றுள்ளும் ஒரோர் செய்யுட்கண்ணே மாத்திரை முதலாகிய உறுப்பும் ஏற்றவகையான் வருவன அறிந்துகொள்க. ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும்.

(236)

[தொன்மை இதுவெனல்]

549.தொன்மை தானே
யுரையொடு புணர்ந்த பழமை மேற்றே.

இது, தொன்மையுணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : தொன்மையென்பது, உரைவிராஅய்ப் பழமையவாகிய கதைப்பொருளாகச் செய்யப்படுவது என்றவாறு. அவை,

பெருந்தேவனாராற் பாடப்பட்ட பாரதமும், தகடூர் யாத்திரையும் போல்வன.      

(237)

[தோல் இதுவெனல்]

550. இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்
பரந்த மொழியா னடிநிமிர்ந் தொழுகினுந்
தோலென மொழிப தொன்மொழிப் புலவர்.

இது, முறையானே தோலென்னும் வனப்புணர்த்துதல் நுதலிற்று. அஃதிருவகைப்படும்: கொச்சகக்கலியானும் ஆசிரியத்தானுஞ் செய்யப்படுவன.

“யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது.”

(461)

என்றவழி, தேவபாணியும் காமமும் பொருளாகவன்றியும் கொச்சகக்கலி வருமென்றானாகலான் 1அவைமேல் வருதல் ஈண்டுக் கொள்ளப்பட்டது.


1. அவைமேல்--தேவபாணியுங் காமமும் அல்லாதவற்றின் மேல்.