Untitled Document
623 | | 'ஆதி நாயகன் - உலகை அளந்த மால், எனவே வாதம் செய்திடுவர் - கற்ற வைணவப் பெரியார். |
624 | | 'முக்குடை யோனாம் - அருக மூர்த்தி யேமுதல்வன்; தர்க்க மேதுமில்லை' - என்று சமணர் சாதிப்பார். |
625 | | காதல் நாயகனைக் - கனவில் காணும் மங்கையர்போல், ஓது கின்றதலால் - உலகில் உண்மை கண்டவரார்? |
626 | | மூலமுதற் பொருளை - என்றும் முடிவிலாப் பொருளை ஞால மிசைக் கண்ணால் - கண்ட ஞானி யெவனு முண்டோ? |
| | 84. அமிழ்துறையும் மணிகள் | 627 | | ஆழ்கடலின் கீழெவர்க்கும் அறியமுடி யாமல் அளவிறந்த ஒளிமணிகள் அமிழ்ந்துறையும், அம்மா! |
628 | | பாழ்நிலத்தில் வீணாகப் பகலிரவும் பூத்துப் பலகோடிப் பனிமலர்கள் பரிமளிக்கும், அம்மா! |
629 | | கடல் சூழ்ந்த உலகுபுகழ் காவியம்செய் யாமல் கண்மூடும் கம்பருக்கோர் கணக்கில்லை, அம்மா! |
630 | | இடமகன்ற போர்முனைதான் ஈதென்னக் காணா திறக்கின்ற வில்விசயர் எத்தனைபேர், அம்மா! | |
|
|