பக்கம் எண் :

114கவிமணியின் கவிதைகள்

Untitled Document
725 எண்ணெய் கிடையாமல் - வீடும்
     இருளடையு தையா!
தண்ணீர் விளக்கெரிக்கும் - தெய்வ
     சக்தி எமக்கும் உண்டோ?

726 குழந்தை பசித்தழுதால் - தாயும்
     கூட அழுவதல்லால்,
எழுந்த பசியாற்ற - வீட்டில்
     எப்பொருள் உண்டு? ஐயா!

727 ஆழி கடந்துவந்த - ரெங்கூன்
     அரிசிச் சரக்கை நம்பி
வாழலாம் என்றிருந்தோம் - இன்று
     வயிறு காய்ந்துநின்றோம்.

728 சீனத்துப் பட்டெங்கே - உயர்ந்த
     சீமைத் துணிகள் எங்கே?
மானத்தைக் காக்க இந்நாள் - எந்த
     மல்பீஸைக் கண்டோம், ஐயா?

729 பேச வலியும்இல்லை - கொண்ட
     பிணிக்கு மருந்தும் இல்லை;
காசெதும் கையில்இல்லை - கேட்டால்
     கடன்தரு வாரும்இல்லை!

730 தேசத் தலைவரெல்லாம் - இன்று
     சிறையில் வாடுகின்றார்;
நாசக் களரியாகி - நாடு
     நடு நடுங்குதையா!

731 என்ன செய்திடுவோம்? - தெய்வமே
     எவ்விடம் போய்ப் பிழைப்போம்?
உன்னருள் அல்லாமல் - எமக்கிங்கு
     உதவி வேறும் உண்டோ?

732 பண்டம் மலியவேண்டும் - எங்கும்
     பயிர் செழிக்க வேண்டும்
சண்டைகள் ஓயவேண்டும் - எவரும்
     சகோதரர் ஆகவேண்டும்.