முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 115 |
Untitled Document
733 | | குடியரசு வேண்டும் - சுதந்திரக் கொடி பறக்கவேண்டும்; அடிமை வாழ்வும் இனி - உலகில் அற வொழியவேண்டும். |
734 | | இந்த வரங்களெல்லாம் - ஈசா இரங்கி அளித்திடுவாய்; சந்ததம் உன்பதமே - போற்றித் தலை வணங்குகின்றேன். |
735 | | யாதுமென் ஊரே எவருமென் கேளிரே பூதலம் யார்க்கும் பொதுவேயென் - ஓதியநற் போதனையை முற்றும் புதியருஷ்யமக்கள் சாதனையில் கொண்டார் தமக்கு. |
736 | | மாதவம் செய்து பெற்ற மந்திர வாளைக் கொண்டு வேதனை மிகுந்தி டத்தன் மெய்யினை அரிவதொக்கும் கோதிலாச் சுதந்தி ரத்தால் குணம் பெறா தென்றும் நாட்டில் வாதினைப் பெருக்கிச் சண்டை வளர்ப்பவர் செய்கை அம்மா. |
737 | | தேடித் தேடி இரைகிடை யாதொரு சிங்க வேறு முழங்கும் முழக்கினில் பாடும் இன்னிசை கேட்டிடலாம்; அதன் பார்வை தன்னில் இரக்கமும் பார்க்கலாம்! வாட வாயில் வயிற்றில் அடித்தெமை வானின் மின்களை எண்ணிட வைத்தவன் நீடு வஞ்சகன் செய்த கொடுமைஇந் நெஞ்சில் ஆறுதல் காண்ப தரிதரோ. | |
|
|