Untitled Document | | தேசீயம் (8) | | | 106. கதர் விற்பனை | 843 | | பாவியென் கதையினைக் கேளும் ஐயா! - அந்தப் பாஞ்சாலி கதையும்ஈ தொக்குமோ? ஐயார்! ஆவியைப் பிடித்துநான் அலைவதெல்லாம் - என்றன் அருமைக் குழந்தைகளுக் காகவே, ஐயா! |
844 | | கூடப் பிறந்தவரும் மாண்டுபோனார் - என்னைக் கொண்டகணவரும் போய்க்காடு மறைந்தார்; தேடி அவரளித்த பொருளுமில்லை - ஒரு செம்பால் அடித்தகாசென் கையிலும் இல்லை. |
845 | | வாடி முகம்சடைத்த மக்களும் உண்டு - தீரா வயிற்றுப் பசியும் உண்டு நானும் உண்டு; வீடும் குடியிருக்க இல்லை, ஐயா! - என்றன் விதியின் கொடுமைகளும் கொஞ்சமோ? ஐயா! |
846 | | பருத்தி விளைக்குச்சென்று பஞ்சுவாங்கினேன் - அந்தப் பஞ்சை அரைத்து நல்ல நூலும் நூற்றேன் ஒருத்தி துணையுமின்றி ஆடையும் நெய்தேன் - அதை ஊரூராய்க் கொண்டுகொண்டு விற்கவும் வந்தேன். |
847 | | நல்ல சரக்குச் சீமைச் சரக்கென்றுநீர் - இந்த நாட்டுச் சரக்கைப் பழிக்கலாமோ? மெல்லிய பூவாடை நெய்துதருவோம் - உங்கள் மேலான ஆதரவே வேண்டும், ஐயா! |
848 | | எங்களையோர் மில்லெனவே எண்ணலாமோ? அந்த இரும்புக்கு அசதி உண்டோ? களைப்பும் உண்டோ? பொங்கு மனக்கவலை ஏதும் உண்டோ? - வீட்டுப் பொறுப்புகள் சற்றும் உண்டோ? கூறும், ஐயா! |
849 | | நெல்லையள்ளிக் குத்துவேனோ? நெய்திடுவேனோ? நான் நெருப்பினை மூட்டுவேனோ? கொட்டை நூற்பேனோ? மில்லினுக்கு வாயும்உண்டோ? வயிறுமுண்டோ? - அதை விட்டுவில காதமக்கள் கூடவே உண்டோ? | |
|
|