பக்கம் எண் :

200கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  தையல் பாகன் தண்ணருளால்
     சமயச் செங்கோல் இனிதோச்சி
வையம் புகழப் பல்லாண்டு
     வாழ்க! வாழ்க! வாழ்கவே!

214. இராம காதை

1225 யாவரும் போற்ற இராம கதையிதனை
ஆவலோடு தேர்ந்தளித்த அன்புடையோன் - மேவு தமிழ்
வித்தகச் செல்வனென் வீர முருகப்பன்
நித்தமும் வாழ்க நிலைத்து

215. திருவள்ளுவர் ஒருதுறைக் கோவை

1226 உள்ளுவந்து போற்றி ஒருதுறைக் கோவைதிரு
வள்ளுவர்மேல் அன்பால் வனைந்தளித்தான் - தெள்ளுதமிழ்ப்
பண்பு மலிந்தொழுகப் பாடுமுத்து சாமிப்பேர்
நண்பன் கவிமணியிந் நாள்

216. சிலம்புச் செல்வம்

1227 சேரர் பெருமான் செந்தமிழில்
     தேடி வைத்த பொருளை யெலாம்
யாரும் எளிதில் பெற்றின்பம்
     எய்தப் புதுவைப் பாரதியார்
தேரும் இனிய உரைநடையில்
     செய்த சிலம்புச் செல்வமிது
பாரில் என்றும் நிலவிடவே
     பரமன் அருளுண் டாகுகவே.

217. யோக சித்தி

1228 பயன்தரு பனுவல் பற்பல கற்று
நயந்தர உரைக்கும் நண்பனை யொத்தும்
உலக வாழ்வின் உண்மையை உணர்த்தி
இகபர சுகங்க ளிரண்டையுந் தரும்அவ்
வழிகளை நன்கு வகுத்துக் காட்டும்