பக்கம் எண் :

252கவிமணியின் கவிதைகள்

Untitled Document
7. கருடாஸ்திரப் படலம்
1397 என்று மருமகன் இயம்பிய மொழிகளை
மாமன் கேட்டு, மனமிக நொந்து
"நல்ல தப்பா! நாகாஸ் திரங்கள்

515 இத்தனை தானோ! இனிவே றுண்டோ?
உன்னைச் சொல்ல ஒருகுறை யில்லை.
கலியன் முற்றின காலமி தல்லவோ?
என், மாமனார் இறந்து வருஷம்எட் டாக
யான்படும் பாடெலாம் யாரே அறிபவர்!

520 நாலாண் டாக நல்ல விளைவிலை;
செலவு கழிந்ததே தெய்வச் செயலாம்;
அடைமழை யாலே அழிந்ததோர் வருஷம்;
வெயிலின் கொடுமையால் வெந்ததோர் வருஷம்
போன ஆண்டில் பொலியே இல்லை, (வருஷம்);

525 கொக்குநோய் விழுந்து குடியைக் கெடுத்தது;
கார்விளை வில்லை, பசானம் கரிந்தது;
விளைவிலை யாயினும் வீட்டுச் செலவில்
ஒருகுறை யேனும் உண்டோ? அப்பா!
பிள்ளைப் பேறும் பிறந்த நாளும்

530 இல்லா வருஷம் இல்லையே, அப்பா!
குடும்பச் செலவுகள் கூறி முடியுமோ?
ஒன்றா? இரண்டா? ஒன்பதா? பத்தா?
ஆண்டு தோறும் ஆலடி மாடன்
கொடைக்கு ரூபாய் கொஞ்சமா செல்லும்?

535 போன கொடைக்குப் புதிதாய் வந்த
வில்லுக் காரி வீரும் மைக்கு
நாலு சேலையும் ரூபாய் நாற்பதும்
கொடுத்தது நீயும் கூடி யல்லவா?
எனக்கு,

540 சல்லடம் கச்சை தைக்க மாத்திரம்
ஐம்பது ரூபாய்ஆச்சுதே, அப்பா!