பக்கம் எண் :

254கவிமணியின் கவிதைகள்

Untitled Document

575   இரண்டா யிரத்துக் கதிகம் எடுத்து,
வீடு வீடாய் விளம்ப வில்லையா?
பதினா றான்று, பார்ப்பார்க் கெல்லாம்,
பட்டும் குடையும் பாத ரட்சையும்
கட்டிலும் மெத்தையும் கடுக்கன்மோ திரமும்

580   பாயச பாத்திரம் பஞ்சபாத் திரமும்
அமுது படியும் அளிக்க வில்லையா?
மேலும்,
பசுவும் கன்றும், பத்து மரக்கால்
நிலமும், தானம் நெறிதவ றாமல்

585   செய்ய வில்லையா? தினமும் வெற்றிலைச்
செலவும் உனக்குத் தெரியா தோடா?
படிப்புரை யருகில் வைத்த படிக்கம்
பத்திர காளி பலிபீ டம்போல்
ஆனதை நீயும் அறியா யோடா?

590   பத்துப் பெண்கள் பட்டினி கிடந்து
பருத்திப் பொதிபோல் பதினா றாம்நாள்
வெளியில் வந்திட வேண்டுமானால்,
அவர்,
எத்தனை தோசை இட்டிலிக் கெல்லாம்

595   ஏம காலரா யிருப்பார்? அப்பா!
இட்ட செலவெலாம் எடுத்துச் சொன்னால்
எண்ணி முடியுமா? எழுதி முடியுமா?
சிதம்பரக் கட்டளை, செந்திற் கட்டளை,
மதுரைக் கட்டளை வகைக்கொரு பூவில்

600   எண்பது கோட்டை நெல்லில் உழக்குக்
குறைந்த தானால் கொடுக்க முடியுமா?
பேயும் அஞ்சும் பெரும்ப ழஞ்சி
ஐய னிடத்தில் ஆண்டுதோறும்
கொண்ட கடனைக் கொடுக்கா விட்டால்,

605   அவர், வயிற்றைஊத வைத்திடு வாரே!
குறளியை ஏவிக் கொன்றிடு வாரே!