முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 265 |
Untitled Document | | | 9. கோடேறிக் குடி முடித்த படலம் | 1399 | | | ஐயோ! ஐயோ! அடங்கா வீர பத்திரப் பிள்ளை, (பாவி பாதகன், என் குடியைக் கெடுத்த கொடிய சண்டாளன், | | 905 | | அரக்கன், ஏழரை ஆண்டைச் சனியன்) விரைவில் ஒடி வீட்டில் சென்று, மனைவியை அழைத்து மண்டையைக் காட்டி, உன் அண்ணன் அடித்த அடிகளைப் பாரடி! இன்றைக்கு, | | 910 | | உயிர்போ காமல் இருந்தது உன் தாலிப் பாக்கியம் தானடி, பகவான் செயலடி! அவன், எண்ணிப் பாராது ஏசின ஏச்சில் கடுகள வேனும் உன் காதில் விழுந்தால், நீ நஞ்சைத் தின்பாய், நான்று சாவாய், | | 915 | | நாக்கைப் பிடுங்கி நடுங்கி இறப்பாய், ஆற்றில் குளத்தில் அலறி விழுவாய், சங்கிலித் துறைபோய்ச் சாடி யொழிவாய்; இதற்கோர் ஐயம் இல்லை, இல்லையே! என்னைப் | | 920 | | பறைப்பயல் பள்ளப் பயலினும் கேடாய் நினைத்துப் பேசின நீசன் அவனை வாயில் மண்ணை வாரி யடித்து வீட்டை விட்டு வெளியி லிறக்கின அன்றைக்கு அல்லவோ ஆண்பிள்ளை யாவேன்? | | 925 | | என்று பற்பல இன்னும் சொல்லி கோபா வேசம் கொண்டவ னானான். கூட இருந்த குசும்பன் சாமி போதா தென்று புகையும் போட்டான். வீணாய்க் கதையை விரிப்பதேன்? அம்மா! | | 930 | | அப்பனும் மகனும் அண்டை வீட்டுக் குசும்பன் சாமியும் குண்டுணிச் சுப்புவும் | | |
|
|