பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு267

Untitled Document

965   ஈதெனச் சொல்ல எவரால் ஆகும்!
செல்லும் செலவு செய்திட, ரூபாய்
நூற்றைம் பதுக்கோர் நோட்டு, வக்கீல்
மைத்துனன் முத்து வாத்தியார் பேருக்கு
எழுதி முடித்தார்; எடுத்து வந்த

970   ஆதா ரங்கள் அனைத்தும் கொடுத்தார்;
இவரிவர் சாக்ஷிகள் என்றும் சொன்னார்;
வெள்ளை மடத்துக் கள்ள பிரானெனும்
மூத்த பிள்ளையே முதலாம் சாக்ஷி;
மாத்தால் கணக்கு மகரா சன்மகன்

975 பிச்சைக் காரன் பின்னொரு சாக்ஷி;
இருக ணில்லா இருளப் பன்மகன்
முத்தொளி மறவன் மூன்றாம் சாக்ஷி;
ஐயம் பிள்ளை அண்ணாவி புதல்வன்
நல்ல பிள்ளை நாலாம் சாக்ஷி;

980   பொய்சொலா மெய்யன் புத்திரன் மாறி
யாடும் பெருமாள் ஐந்தாம் சாக்ஷி.
நம்பர் பதித்த நாலாம் மாதம்
ஒருநாள் காலை, உறக்கப் பாயில்
எழுந்து என் கணவர் இருக்கும் பொழுது,

985 கறுப்பன் கட்டையன் கப்படா மீசைக்
காரன் ஒருவன், காலனைப் போல,
கோர்ட்டுச் சம்மனைக் கொண்டு வந்தான்,
(நச்சுவா யண்ணன் நாச காலன்)
வீர பத்திரன், வெட்டையாய்ப் போவான்,

990   எண்ணினது போல எல்லாம் ஆச்சுதே!
நினைத்தது போல நேரம் விடிந்ததே!
இந்நாள் இங்கு யான்படும் பாடெல்லாம்,
நாளை
அவரும் மக்களும் அனுபவிப் பார்கள்,

995 யாதும் தடையிலை, யாதும் தடையிலை;
பத்தினி என்சொல் பழுதா காது,
உத்தமி என்சொல் ஊரையும் சுடமே;
கேட்கும், கேட்கும், தெய்வம் கேட்கும்!)
சேவகன் வந்த காரியம் தெரிந்தோ,