Untitled Document 1000 | | இயல்பாய்த் தானோ (யாதோ அறியேன்) மேல வீட்டிருந்து வெள்ளையம் பிள்ளை அண்ணனும் அப்பொழுது அங்கு வந்து, 'யார்இவன்' என்றனர்; 'இன்னார்' என்றோம்; சம்மனைப் படித்துச் சங்கதி யறிந்து என் | 1005 | | புருஷனை நோக்கி, "போனதெல்லாம் போகட்டும், ஐயா! பொய்கைப் பற்றில் ஆறு தடியும், அணஞ்சி விளையும் துலுக்கன் தோப்பும், தொட்டிச்சி மேடும், மேலத் தெருவில் மேடை வீடும், | 1010 | | ஈரணை ஏரும், ஏழு பசுவும், யாதொரு கடனும் இல்லா மல், நீர் இருக்க மட்டும் யாப்பிய மாகவும் அப்பால் அவற்றைஉம் அருமை மக்கள் ஒன்று விடாது உகந் துடைமை யாகவும் | 1015 | | எடுத்துக் கொள்ள ஓர் ஓலை யெழுதி உம்மை மக்களோடு ஒதுக்கி விடுவரேல், வாங்கிக் கொண்டு வழக்கில் லாமல் சும்மா இருப்பது மெத்த சுகமாம். இப்படி ராஜி எழுதிக் கொடுக்க | 1020 | | உமக்குச் சம்மத முண்டோ? சொல்லும், வியாச்சிய மென்னும் சுழியில் விழுந்து கறகற வென்று கறங்கி மயங்கி, கைப்பொருள் இழந்து கடனும் வாங்கி வீணாய்த் துன்பம் விளைத்திட வேண்டாம், | 1025 | | அல்லலை விருந்துக்கு அழைத்திட வேண்டாம்! தொல்லைக்குத் தூதுசொல்லிட வேண்டாம்! ஐயோ! கோர்ட்டுக்கு ஆரே போவார்! ஐயோ! கோர்ட்டுக்கு ஆரே போவார்! பண்டொரு நீதிபதி, தம் கோர்ட்டு | 1030 | | வாயிலின் வந்த மனித ரெல்லாம், உடைந்த ஓட்டை ஒருகையி லேந்தி |
| |
|
|