முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 269 |
Untitled Document | | வழக்கு இழந்தவன் வாடி நிற்பதையும், தாட்பொதி யொன்று தலையிற் சுமந்து வென்றவன் உடலம் மெலிந்து நிற்பதையும் | 1035 | | கண்களால் கண்டு கண்டு, நாளும் நல்லறிவு எய்திட நடைநடை தோறும் இருபுறச் சுவரிலும் இரண்டு உருவங்கள் செய்து வைத்த கதைதெரி யாதோ? இழந்தவர் வென்றவர் இருவர் மீதியும் | 1040 | | இவைக ளன்றி வேறு எவையும் உண்டோ? புத்தியில் லாஇரு பூனைகள் பண்டு வானரத் திடம்போய் வழக்குச் சொல்லி உள்ளதும் இழந்துவே றுணவும் இன்றி வெறுங்கை யாகி வெட்கி மீண்டதாய் | 1045 | | நாம், பள்ளியில் பாடம் படிக்க வில்லையோ? கோர்டில் சென்று குதித்திட வேண்டாம். அரையடிச் சுவருக் காகஜக் கோர்ட்டு வரையிலும் ஏறி வழக்குப் பேசி | 1050 | | அந்திர புரத்து மந்திரம் பிள்ளை அடியோடு கெட்டது அறிய மாட்டீரோ? வடக்கு வீட்டு மச்சம் பியும் அவர் மருமக் களுமாய் வருஷம் எட்டாக மாறி மாறி வாதம் செய்து | 1055 | | யாவையும் போக்கி, இரவா வண்ணம் இரந்து திரிவதை இவ்வூ ரில்நாம் கண்ணால் இன்று காணவில்லையோ? வேலுப் பிள்ளை வீட்டு நம்பரில், ஐந்தாம் சாக்ஷி ஆண்டி அவனை | 1060 | | அழஅழப் படுத்தி, அறுபது ரூபாய் வாங்கிக் கொண்டு, மேல் வாயிதாத் தோறும், 'வீட்டுக் காரியம் வெட்ட வெளிச்சம், முட்டப் பஞ்சம், மூதேவி வாசம்; பானையி லேபத் தரிசி இல்லை, |
| |
|
|