பக்கம் எண் :

270கவிமணியின் கவிதைகள்

Untitled Document

1065   உப்போ புளியோ ஒன்று மில்லை,
உச்சிக்கு எண்ணெய் ஒரு துளி யில்லை,
தொட்டில் கட்டத் துணியு மில்லை,
காந்தி மதிக்குக் கண்டாங்கி யில்லை,
எனக்கும் வேட்டி யாதொன்றுமில்லை;

1070   இப்படி யிருக்க, எப்படி உமக்காய்
கோர்ட்டில் மொழிநான் கொடுக்கவருவேன்?'
என்று சொல்லி, எத்தனை பணத்தைத்
தட்டிப் பறித்தான் சண்டாளன், அப்பா!
முளைய நல்லூர் முதல்பிடிப் பிள்ளை

1075   அண்ணனும் இப்படி யாகக் காரணம்,
விளாத்திக் கோண விவகார மல்லவோ?
எத்தனை வகையை இழந்தார், அப்பா!
மூக்கரை யன்விளை மூலையில் நிற்கும்
பலாமர மொன்றுமே பத்துக் குடும்பம்

1080   தாங்கி, மீதியும் தருமே, அப்பா!
அந்த
மதினி கழுத்தில் மங்கிலியம் தவிர
எல்லா நகையும் இறக்கி விட்டாளே!
ஒவ்வொரு காதிலும்உழக்குழக் குப்பொன்

1085   இட்டிருந் தாளே! எல்லாம் போச்சே!
ஆளும் வேற்றாள் ஆகி விட்டதே
கருந்தாளி உலக்கை கையில் எடுத்து அவள்
கோவில் நெல்லைக் குத்துவாள் என்று
யாவ ராயினும் எண்ணினது உண்டா?

1090   என்ன செய்வாள், ஏழை! பாவம்!
நட்டியும் குட்டியும் நாழியும் உழக்குமாய்
ஏழு மக்களை எப்படி வளர்ப்பாள்?
கோர்ட்டு வழக்குக் கொஞ்சமா செய்யும்?
இதுவும் செய்யும், மேல் எதுவும் செய்யும்;

1095   கட்டுக் கட்டாய்க் காய்கறி யனுப்பவும்,
வல்லம் வல்லமாய் மாம்பழம் அனுப்பவும்,