முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 345 |
Untitled Document | | சுகண சுந்தரி சுஜாதை கேட்டு, நெஞ்சில் அன்பு நிறைந்தவ ளாகி, வனத்தில் வந்து, மலர்மழை பொழியும் மரத்தின் அடியில் வையகம் வாழ மாதவம் செய்யும் வள்ளலைக் கண்டனள். | 178 | | | வேறு | | 1623 | | கண்ணெதிர் காட்சி தந்த கடவுளே இவரென்று எண்ணி மண்ணுற வணங்கிச் செந்தா மரைமல ரடிகள் போற்றி, | 179 | 1624 | | ‘பண்ணியஞ் சிறிது யானும் பக்குவம் செய்து வந்தேன், அண்ணலே! அருந்தி நீயும் அருள்செய வேண்டும்’ என்றாள். | 180 | 1625 | | என்றவள் படிகக் கிண்ணம் ஏந்திய வாச நீரை அன்றவள் திருக்க ரங்கள் அலம்பிட அளித்து, அப் பாலோர் | 181 | 1626 | | பொன்தரு கலத்தில் பண்டம் பொலிவுறப் பெய்து நின்றாள்; ஒன்றிய கருணை மூர்த்தி உம்பர்நாட் டமுதின் உண்டான். | 182 | | | வேறு | | 1627 | | உண்ட அமுதின் உறுகுண மெல்லாம் ஏழைஎன் நாவால் இயம்புதல் எளிதோ? இரவும் பகலும் இடைவி டாமல் ஊணும் உறக்கமும் இன்றி; உரவோன் தீவர மாகச் செய்த தவத்தால் வாடி இளைத்து வருந்திய களைப்பெலாம் கனவு போலக் கழிந்து போயது. உயிரும் உணவை உண்டது போல | | |
|
|