பக்கம் எண் :

426கவிமணியின் கவிதைகள்

Untitled Document
51. தெள்ளத் தெளிந்ததையா!
  இராகம் - கமாஸ             தாளம் - கண்டசாப்பு  
பல்லவி
1835 தெள்ளத் தெளிந்த தையா! - உமது
     கள்ளத் தனமெல்லாம்.
 
அநுபல்லவி
  வள்ளிக் குறத்தியின்
     மையலில் சிக்கினால்
எள்ளத் தனை அன்பும்
     என்மீ திருக்குமோ?
(தெள்ளத்)
சரணம்
வேட்டைக் கெனஎழுவீர்! - கையில்
     வேலையும் ஏந்திச் செல்வீர்!
காட்டினைச் சுற்றியக்
     கள்ளியின் தினைப்புன
மேட்டுக்கே ஒருமானை
     விரட்டிப் பின்ஓடுவீர்!
(தெள்ளத்)
கட்டிச் சிறையிடுவார் - அந்தக்
     காட்டுக் குறவரென்று
தட்டமிந் துள்ளம்
     தடுமாறி யல்லவோ
வெட்டை வெளியிலோர்
     வேங்கை மரமானீர்!
(தெள்ளத்)
52. மாயன் மருகன்
இராகம் - தர்பார்                தாளம் - ஆதி

பல்லவி
1836 ஐயா! நீ அருள் செய்யவேண்டும் - உன்றன்
     அடியினை யன்றிவே றொருதுணை அறியேன்