முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 495 |
Untitled Document
உலகமே துக்கமயமாயத் தோன்றுகிறது. எல்லாவகை இடையூறுகளையும்நீக்கவல்ல விநாயகர் கடவுளும் இடையூற்றால் நெஞ்சு கலங்கி வருந்தி நிற்பவர் போலத் தோன்றுகிறார். அவரும் மருமக்கள் வழியைச் சார்ந்தவராயிருக்க வேண்டும்; அதனால் தான் துன்புறுகிறாரெனச் சுயசரிதையைக் கூறும் கதாநாயகி நினைக்கிறாள். இக்கடவுளின் அருகே நிற்கும் ஒரு சிலரிடத்தும் துக்கம் தோன்றுகிறது; ஆனால் மனத்தில் இரக்கமில்லை; ஏழைப் பெண் புலம்புவதில் ஒரு மாத்திரை அதிகமென்று துக்கிக்கிறார்கள். இவர்கள் இலக்கண வித்துவான்கள்; தாடி பற்றியெரியும் போது சுருட்டுப் பற்றவைக்க நெருப்புக் கேட்கிற இனத்தைச் சார்ந்தவர்கள். இவர்களைத் தனது சோகங்கலந்த சிரிப்பினால் ஒதுக்கிவிட்டுத்தனது கதையைத் தொடங்குகிறாள். துன்பத்திற்கும் வறுமைக்கும் தாயகமாயுள்ள ஒரு குடும்பத்தில் தோன்றினாள்; அநாதை, பஞ்சகலியாணிப் பிள்ளைக்கு ஐந்தாவது மனைவியாய் இவள் வாழ்க்கைப்பட்டாள்; புகுந்தகத்தில் செல்வமிருந்தது; ஆனால் துன்பத்துக்கும் குறைவில்லை. அங்கே அவளுக்குக் கிடைத்தது புழுக்கை உத்தியோகந்தான்; சக்களத்திகளின் தலையணை மந்திரோபதேசமெல்லாம் இவள் தலையில்தான் விடிந்தது. மாமியின் கொடுங்கோலரசு; இவ்வரசிதாடகைப் பிராட்டியாரின்அவதாரம்; இவள் திருவிளையாடலெல்லாம் பத்துப் பரஞ்சோதிகள் பாடினாலும் முடிவடையாது.
இந்த ஆட்சியின் புது மருமகள் கஞ்சியோ கூழோ காடி நீரோ கும்பியாரக் குடித்ததேயில்லை. | ஒருநாள் தன் மகன் கேலியாகப் பேசத் தொடங்கியது அவனுக்கே கெடுவினையாக முடிந்தது. இதனால் விளைந்த துன்பம்; இதுபோன்ற துன்பங்களிடையில் நகைப்புநிகழ்ச்சிகள்; தனது கணவன் மனைவியர் ஐவரோடும் குமரித்தீர்த்தம் ஆடியது (இது தேவர்களுக்கும் ஆனந்தமளிக்கும் திருக்காட்சி); கணவன் தீர்த்த மாடியதன் பயனாக மீளாவுலகம் புகுந்து மீண்டு வந்தது; தான் அடைந்த தாங்கவொண்ணாத் துன்பம்; பின்னர், கணவனது எச்சிற்சோற்றுக்குச் சக்களத்திகள் செய்த சச்சரவு; இவையெல்லாம் மழையிருளும் மின்னலும் போல மாறிமாறிக் காட்சியளிக்கின்றன. காரணவனாகிய தன் கணவனை மருமகனான அவகாசி பழித்து வைகிறான். இங்கே,
ஆரைக் கேட்டுநீர் ஐந்து கலியாணம் அடுக்கடுக் காகச் செய்தீர் ஐயா? பட்டப் பெயரும் பஞ்ச கலியாணிப் பிள்ளை யென்றுநீர் பெற்று விட்டீரே | | |
|
|