பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு497

Untitled Document

கணவர்க்கு அந்திய காலம் தண்ணீர்
குடிக்கும் பாத்திரம் குடுக்கை ஆனதும்
பரந்த சட்டி படிக்கம் ஆனதும்
பாலும் அன்னப் பாலே ஆனதும்.

     எண்ணி எண்ணி நெஞ்சம் குமுறுகிறாள். எல்லாவற்றிலும் மேலாகத்
தன் கணவனது அந்திய நிலையில் அவரது ஆத்மசாந்திக்குத்திருவாசகம்
படிக்கத் தன் மகனைச்  சொன்னபோது அவன் தன்னால் முடியாதென்று
தமிழை இகழ்ந்து சொன்னது     இப்பெண்மணியின் நெஞ்சைப் பிளந்து

விட்டது. கணவரின் முடிவு வந்தது;
ஏங்கி அழுத எங்களை நோக்கினர்;
வாடி அழுத மக்களை நோக்கினர்;
கடவுளை எண்ணிக் கையை எடுத்தனர்;
கண்ணை மூடினர், கயிலைபோய்ச் சேர்ந்தனர்.

கதாநாயகியின் துக்கம் நிரம்பிவிட்டது. அவள் கண்களிலும் இதயத்திலும்
உதிரங் கொட்டுகிறது; அவள் வயிறுஎரிகிறது. அனற்பிழம்புபெருக்கெடுத்
தோடுவது போலஅவள் சொற்கள் புறப்படுகின்றன; மருமக்கள் வழி,

மனிதரைப் பேயாய் மாற்றும் பாழ்வழி;
                ........

நடைப்பிணம் ஆயிரம் நடக்கும் வனவழி;
வெவ்வழி, சற்றும் வெளிச்ச மிலாவழி;
இருள்வழி, செல்பவர் இடறும் கல்வழி;
                ........

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென்று
அவ்வை சொல்வழி அறியா மடவழி,
ஐயோ, இவ்வழி ஆகாது, ஆகாது;
ஆடுகள் மாடுகட்கு ஆகும் இவ்வழி
மனிதர் செல்லும் வழியாயிடுமோ?
                ........

கற்றவர் உளரோ! கற்றவர் உளரோ!
வறுமைக்கு இரையாய் மக்களை விட்டிடும்
அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!
மாதர் கண்ணீர் மாறா நிலத்தில
                ........