1. | ஓர் உத்தமமான மருமக்கள் வழிக் குடும்பத்தின் லக்ஷணங்கள் என்ன? நாஞ்சில் நாட்டில் எக்காலத்திலாவது அவ்வித குடும்பங்கள் ஏற்பட்டிருந்ததுண்டா? |
2 | குடும்பங்களின் நிலைமை முற்காலத்தில் எப்படியிருந்தது? தற்காலத்தில் எப்படியிருக்கிறது? பல குடும்பங்களின் சரித்திரங்களையும் ஆராய்ந்து விடை நிதானிக்க. |
3 | நாஞ்சில் நாட்டு வேளாளர் - மருமக்கள் வழிக்குடும்பத்திற்கும் நாயர் - குடும்பத்திற்கும் வித்தியாஸம் உண்டா? |
4 | நாஞ்சில் நாட்டார் ஆதிக்காலந் தொட்டே மருமக்கள் வழியை அனுசரித்து வருகிறார்களா, அல்லது இடைக்காலத்தில் அதைக் கைக் கொண்டிருப்பவர்களா? சரித்திர ஆதாரத்துடன் விடை காண்க. |
5 | தம் தரவாட்டு க்ஷேமமொன்றையே முக்கிய ஜீவித நோக்கமாகக் கொண்டு உழைத்துவரும் காரணவர்கள் இப்பொழுது நாஞ்சில் நாட்டில் எத்தனை பேர் இருக்கக்கூடும்? |
6 | பொதுவான ஒரு காரணவன் இறக்கும் போது குடும்பத்தின் செல்வ நிலை எப்படியிருக்கிறது? அவன் குடும்ப பரணம் கையேற்ற காலத்தில் இருந்ததைவிட விருத்தியடைந்திருக்கிறதா? அல்லது மோசமாயிருக்கிறதா? காரணம் என்ன? |
7 | தகப்பனால் முன்வந்திருக்கும் மக்கள் அதிகமா? அல்லது காரணவனால் முன் வந்திருக்கும் மருமக்கள் அதிகமா? ஒவ்வொன்றிலும் நூற்றுக்கு எத்தனை வரும்? |
8 | நாஞ்சில் நாட்டில் பெரும்பாலரும் தகப்பனுடைய ஊரில் வீடுங்குடியுமாயிருக்கிறார்களா அல்லது தங்கள் காரணவன் குடும்ப வீட்டில் இருக்கிறார்களா? |