பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு501

Untitled Document
9. குடும்ப முதலைக்            கறம்பி மக்களுக்குக் கொடுக்கும்
காரணவர்களின்                தொகை அதிகமா? அவ்வாறு
கொடுக்காதவர்களின் தொகை அதிகமா?
10 வியவகார மில்லாத குடும்பங்கள் நூற்றுக்கு எத்தனை வரும்?
11 காரணவனும்          அநந்திரவர்களும் ரம்மியமாக இருக்கிற
குடும்பங்கள் ஏதாவது இருக்கிறதா?
12 நாளுக்குநாள்      பாகப்பிரமாணங்கள் அதிகப்பட்டுக்கொண்டு
வருகிறதா? அல்லது குறைந்து கொண்டு வருகிறதா?
13 நூறு வருஷத்திற்கு இப்புறம் பாகமாகாத குடும்பங்கள் எத்தனை வரும்?
14 ஒருவனுக்கு மனைவி மக்கள்  மீது அன்பு அதிக மாயிருக்குமா? அல்லது மருமக்கள்மீது அன்பு அதிகமாயிருக்குமா?
15 குடும்பத்தைப் பொறுத்துள்ள        காரணவனது கடமைக்கும்
அவனுக்கு இயற்கையாக மக்கள் மீது அமைந்துள்ளஅன்பிற்கும்
போராட்ட மேற்படுமாயின்,          ஜெயிப்பது பெரும்பாலும்
எதுவாயிருக்கக்கூடும்? அன்பா? கடமையா?
16 காரணவனொழிந்த    மற்றப் பேர்கள் சம்பாதிக்கும் பொருளைக்
குடும்பப்               பொது முதலோடு சேர்ப்பது உண்டா?
சேர்ப்பதில்லையாயின் காரணமென்ன?
17 பொதுவாக நமது           முன்னேற்றத்திற்கு மருமக்கள் வழி
அனுகூலமாயிருக்கிறதா? பிரதி கூலமாயிருக்கிறதா?
18 ‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி      மான்மியத்தால் தெளிவாகுந் தோஷங்கள்      உண்மையானவைகளா? அல்லவா? அவற்றை
நிவர்த்தி செய்ய வேண்டுவது அவசியமல்லவா?
19 உள்ளெல்லாம்    அழுகிக் கொழுகொழுத்த முழுப்பூசணிக்காயா அல்லது அழுகாத நல்லகாயின்         ஒரு துண்டா நமக்குப்
பிரயோஜனமாவது?
20 பக்கக்கன்றுகள் தாய்வாழையைச்       சுற்றி ஒன்றாக நின்றால் நன்றாய்க் குலைத்துப் பயன் தருமா? அல்லது அவற்றைத் தனித் தனியாயெடுத்து வைத்துப் பாதுகாத்தால் அவ்வாறு பயன்தருமா?
நாற்று நடுவதில் முதலைக்      குறைத்து வைத்து நடவேண்டும்
என்பதன் கருதபுது என்ன?