பின்னிணைப்பு எண் - 5 |
மருமக்கள்வழி மான்மியம் |
(அடிக்குறிப்புகள்) |
விநாயகர் வணக்கம் |
2-3 இவ்வடிகளுக்கு இரண்டு வகையாகப்பொருள் கொள்ளலாம். விநாயகனே உன்னிடம் அன்புடையவர் படைத்தவற்றை, வாரி உண்பதற்கு வசதியாக யானையின் தும்பிக்கையை ஏந்தினாய் என்பது ஒரு பொருள். உன்னிடம் அன்பை உடையவர்கள் வேண்டியதைக் கொடுப்பதற்கு நீண்ட கரத்தைப் பெற்றிருக்கின்றாய் என்பது இன்னொரு பொருள். |
8 | அம்பலம் பலர் கூடும் வெளியிடம் |
10 | குனிப்பான் நடனமாடுவான் |
16 | பணா முடி பாம்பின் பட முடி |
| அரவணை பாம்புப்படுக்கை |
19-20 | சக்கரம் திருமாலின் கையில் உள்ளசக்கராயுதம் |
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்1950 வரை வழக்கில் இருந்த நாணயம். 28 1/2 சக்கரம் ஒரு பிரிட்டீஷ் ரூபாய் அல்லது 28 சக்கரம்1 திருவிதாங்கூர் ரூபாய் |
24 சந்தி-நான்கு தெருக்கள் கூடும் இடம் |
26 இருவழி - விநாயகன், மாமன்(திருமால்)வீட்டிலும்,தந்தை(சிவன்) வீட்டிலும் இடமின்றி சந்தியில்அமர்ந்திருப்பதைப்போல,மருமக்கள்வழிக் குழந்தைகளும் உள்ளனர் என்பதைக் குறிப்பது. |
அவையடக்கம் |
| புல்வாய் கலைமான் |
45 | தமியர் தனியர் |
| போதம் சுயஅறிவு |
50 | விகாரம முறைகேடு |
56 | பஞ்சப்பாட்டு தனது ஏழ்மையை ஓயாமல் கூறும்கூற்று. |
57 | இலக்கண வழுஉக்கள் இலக்கணப் பிழைகள் |