பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு505

Untitled Document
98 கணவன் பெயரை மனைவி சொல்லுதல் கூடாது என்பது மரபு.
103 தொழுத்துச் சாணம் - மாட்டுக் கொட்டிலில் உள்ள சாணம்
104 தொட்டித்தண்ணி - மாட்டுக் கொட்டிலில் மாடுகள் குடிக்க
வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் உள்ள தண்ணீர்
105 அடுக்களை - சமையல் அறை
112 பெருமாப்பிள்ளை - மூத்த மனைவியின் பெயர்
113 ஏகாங்கி - குழந்தையில்லாமல் தனியே இருப்பவள்
114 உரிய - உரி; அரை நாழி அளவு
115 உழக்கு - கால்படி
கஞ்சி - அரிசிச்சோறு கலந்த நீராகாரம்; குறுநொய் - அரிசியின் சிறு நொய்
116 மகராசிகள் - எல்லாச் சிறப்பும் பெற்றவர்கள்
122 அழுபிள்ளைக்காரி - எப்போதும் அழுது கொண்டிருக்கும்
பிள்ளையை இடுப்பில் வைத்துக் கொண்டிருப்பவள்
123 அடம் - பிடிவாதம்
130 முழுகவுமில்லை - கர்ப்பமாயிருப்பதைக் குறிக்கும் பேச்சுவழக்கு சொல்
131 வயாக்கோட்டி - மசக்கை (யாக்கோயொட்டி)
133 எடுப்புக் காரி - கர்வமுடையவள்
140-143 இது ஒரு நாட்டுப்புறப்பாடலின் ஒரு பகுதி; இந்தநாலுவரிப்பாடல்
மு.வை.அரவிந்தன் தொகுத்த நாட்டார் பாடல்கள் என்னும்நூலில் (பாரி நிலையம்,         சென்னை 1956 ப.65) உள்ளது. இதன்
தொகுப்பாசிரியர் இதைத் தொகுத்த இடம் பற்றிக் கூறவில்லை.
146 அரக்குப்பாவை - மெழுகுப்    பொம்மை; அடுக்களை அடுப்பு
நெருப்பின் அருகில்        நின்றால் உருகி விடுவாள் என்பது
கிண்டலாகக் குறிப்பிடப்படுகிறது.
147 கரிக்கலம் - கரிபட்ட பாத்திரம்
151 தலையணை மந்திரம் - படுக்கையறையில் கணவனுக்கு, மனைவி இரகசியமாய்ச் சொல்லும் கோள்.
153 ஒவ்வொரு காலம் - சிறப்பு        நிகழ்ச்சிகள் வீட்டில் வரும்
காலத்தில்.