பக்கம் எண் :

506கவிமணியின் கவிதைகள்

Untitled Document
மாமி அரசியல் படலம்
157 அரங்கு - வீட்டின் உள்         அறை; வீட்டில் முக்கியமான பொருட்கள் வைக்கப்படும் இடம்.
அறைப்புரை - வீட்டின்  முன்புறம் அமைந்த தனியான அறை;
தட்டு - மாடி
சாய்ப்பு - சாய்வான கூரை உடைய சிறிய அறை; இது வீட்டின்
இடதுபுறம் இருக்கும்.
160 கொல்லமிளகு - மிளகாய் வகை; நல்லபழுத்து காய்ந்த வற்றல்
மிளகு
162 உப்பில் புளியை உருட்டுதல் - உப்பும், புளியும் தனித்தனியாக 
இருந்தால் மருமகள் அவற்றை விலைக்குக் கொடுத்துவிடுவாள்
என்பதால் மாமியார் இப்படிச் செய்கிறாள்.
170 காடிநீர் - கஞ்சித்தண்ணீர்; பழைய சோற்றில் உள்ள நீர்
171 கும்பி - வயிறு
173 கண்டாங்கி சாயப்புடவை.
175-186 இங்கு குறிப்பிடப்படும் இந்த வரிகள் திருவானந்தம் பிள்ளையின் ‘இராமகீர்த்தனம்’ என்னும்       கதைப்பாடலின் செல்வாக்கால் உருவானவை   எனக் கூறமுடியும். தாடகையின் கொடுமையைக்
குறிக்கும் இடத்தில் இப்பகுதி வருகிறது.
பெருத்த மலைபோல் வருவாள்
பெரும்பாவி தாடகை தான்
இந்திரன் ஆயிரம் கண்ணை
எளிதினிலே பெற்றவள்தான்
அங்கும் இங்கும் எங்கும் ஆகவே
எறும்பும் காணா இடத்தில் போவாள்
புகையும் நுழையா இடத்தில் நுழைவாள்
அரக்கி இவளும் ஆணாய் பிறந்தால்
அகிலம் ஆள்வாள்
189-189 மாமியார் இறந்து விட்டதைக்,     கதை கூறும் பெண் இப்படிக்
கூறுகிறாள்,