பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு507

Untitled Document
190 உழக்கு - கால்படி
191 நாழி - இரண்டு உழக்கு
192-93 மதுரை சோமசுந்தரக்          கடவுள் திருவிளையாடல் கதை
நிகழ்ச்சியைக் குறிப்பிடுவது.
198 திருவிளையாடல் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர்
203-206 இங்கு, குறிப்பிடப்பட்ட      வரிகளில் முத்தராம்மன் கதையின்
பாதிப்பைக்        காணலாம். முத்தாரம்மன் என்னும் நாட்டார்
தெய்வத்திக்குரிய வில்லிசைக்    கதைப்பாடலின் நடுப்பகுதியில்
நாககன்னி கதை வருகிறது. இக்கதையில் மூத்தவளானநாககன்னி
இளையவள் தெய்வகன்னியைத் துன்புறுத்துவதாக ஒரு நிகழ்ச்சி
உள்ளது. இதை இக்கதைப்பாடல்
சடைத்ததென்று இருக்கவெட்டாள்
தலைமுடியைக் கோதவெட்டாள்
வடிப்பமுடன் பழக்கமிட
மறுவீட்டில் போகவெட்டாள்
வெற்றிலையைத் தின்ன வொட்டாள்
வேர்த்தாலும் குளிக்கவொட்டாள்
நிறைய அன்னம் உண்ண வொட்டாள்
குனியவொட்டாள் நிமிர வொட்டாள்
என்கிறது.
(ஆறுமுகப் பெருமாள்        நாடார் (ப.ஆ.) முத்தாரம்மன் விற்கவிதை, நாகர்கோவில் 1978 ப.62)
207 மதினி - அண்ணி
208 சடைவாறுதற்கு - ஓய்வெடுப்பதற்கு
212 சம்மந்தி - துவையல் வகை
கேலிப்படலம்
219 குலுக்கை - நெல் போட உதவும் குதிர்
221 பனந்தூர் - பனைமரத்தின் அடிப்பகுதி
பாறி - இளைத்து
225 குதில் - குதிர்
226 பத்தயம் - தானியம் முதலியன இட்டுவைக்கும் மரத்தாலான
களஞ்சியம்