பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு511

Untitled Document
400-401 விளை - புன்செய் நிலம்; புன்செய்      நிலத்தில் நின்ற பனை
மரங்களை வெட்டின பிறகுதான் அதை      நன்செய் நிலமாகத் திருத்த
முடியும். வெட்டின பனைகளை விற்றதனால்   கிடைத்த பணம், புதுநிலம்
திருத்துவதற்குப் போதாதோ? என்று மருமகன் காரணவனிடம்கேட்கிறான்.
402 கண்ணியம்மை - மருமகனின்  உறவுப் பெண்; அவன் சகோதரி என்றும் கூறலாம்;
கன்னியம்மை என்ற பாடமும் உண்டு.
403 கால்காசு - மிகக் குறைந்த அளவு ஒரு காசு = 1/448 ரூபா
  கைப்பொறுப்பு - கையிலிருந்து செலவு
404 மஞ்சாடி - 260 மி.கிராம்; தங்கத்தை      நிறுக்கும் ஓர் அளவு,
‘மஞ்சாடிப் பொன் இல்லாதவள்’       என்பது நாஞ்சில் நாட்டு
வழக்காறு.
405 குச்சு - காதிலணியும் தங்க ஆபரணம்.
408 மிச்சம் - எஞ்சியது
411 நெட்டரமா, நெடுங்கண்   வயல் - வயலின் பெயர்கள்; நாஞ்சில்
நாட்டில் வயலின் தன்மை;     இடம் அடிப்படையில் பெயர்கள்
இடப்பட்டிருக்கின்றன.
412 ஈடு - அடைமானம் (Pleadge)
414 ஊரில் காரிய விசாரம் - ஊர்     பற்றிய கவலை; ஊர்ப் பொது
நிர்வாகத்தில் பங்கேற்பு
416 கணக்கன் - ஊர் வரவு செலவுகளை எழுதுவதற்குரிய எழுத்தர்.
418 அம்மன் வகை - ஊருக்குப் பொதுவான முத்தாரம்மன் அல்லது
வேறு நாட்டார் பெண் தெய்வக் கோவிலுக்குரிய சொத்து
419 தெண்டம் - தண்டம்; அநாவசியமாக ஏற்படும் நஷ்டம்
420 உச்சிக்கொடை - நாட்டார் தெய்வக்   கோவில்களில் நண்பகல்
வேளையில் நடத்தப்படும் சிறப்பான பூசையும், வேறுநிகழ்ச்சியும்.
பிச்சி வெள்ளை - பிச்சி என்னும் பூ
421 கொழுந்து - பச்சைநிற நறுமண இலை
423 ஏதுவினாலே - காரணத்தாலே