பக்கம் எண் :

512கவிமணியின் கவிதைகள்

Untitled Document
428 ஒரு பூ; - பூ என்பது சாகுபடி          காலத்தைக் குறிக்கும்.
வருஷத்திற்கு ஒரு முறை விளையும் நிலத்தை  ஒரு பூ என்றும்,
இருபோகம் விளையும் நிலத்தை இருபூ என்றும் கூறுவர்.
ஒருபூ - ஒரு போகம்
429 பொலி - நெல் குவியல், பொலியளவு - பொலி குவிந்ததும்,அதன் முதல் சில மரக்கால் நெல்லை, உறவினர்க்கு அன்பளிப்பது ஒரு
வழக்கம்.
432 ஒற்றி கொடுத்திடும் - காரணவருக்கு     நிலங்களை விற்பதற்கு
உரிமை கிடையாது.
433 மலரணை - Binami, பேரிரவல்; (பினாமி)
434 பேர்க்கூலிப் பிரமாணம் - தன்பெயரை     உடைய பேரனுக்குத்
தாத்தா எழுதிக் கொடுக்கும் நன்கொடைப் பிரமாணம்
435 இட்டதானம் - ஒருவர் மீதுள்ள     இட்டத்தினால், அவருக்குச்
சொத்துக்களைத் தானமாக வழங்குவது.
443 பூசை - காரணவரின் சிறப்புக்குக் காரணமான விஷயங்கள்
444 ஆரை - யாரை
446 பஞ்கல்யாணிப் பிள்ளை - ஐந்து பேரைத் திருமணம் செய்ததால்
இந்தப் பெயர் ஊரில் வந்தது.
451 ‘கள்ளர், மறவர், ஊர்க்கணக்கன்     ஆகியோர் பிறர்பொருளை அபகரிப்பர்’ என்பது வழக்காறு.
453 கன்னக்கோல் - சுவரை  அகழ்வதற்குக் கள்வர் வைத்திருக்கும்
நெம்புகோல் போன்ற கருவி
454 எழுதுகோல் இறகு - கழுகு      என்னும் பறவையின் இறகைக்
கூர்மைப்படுத்தி, கடுக்காய் மையில்   தொட்டு எழுதும் வழக்கம்
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாஞ்சில் நாட்டில் இருந்தது.
466 நீங்கள் - உங்களைப் போன்ற மருமக்கள்வழிக் காரணவர்.
469 காரணத்தீனம் - காரணத்தானம்     (ஸ்தானம்) என்னும் சொல்
கிண்டலாக இப்படி வருகிறது.
470 கண்டூரத்தில் - கண்டூரம் - கண்டௌஷதம்; ஜன்னிஅதிகரிக்கும் போது கொடுக்கப்படும் மருந்து
472 போகர், மச்சமுனி, புலிப்பாணியர் - பதினெண் சித்தர்களில்சித்த
வைத்திய நூற்களை எழுதியவர்கள்.