பக்கம் எண் :

518கவிமணியின் கவிதைகள்

Untitled Document
கன்றுகள் - மூத்தகாரணவரின்        பிள்ளைகள்; இங்கு நி்ந்தையாகக்
‘கன்றுகள்’ என்கிறார்.
666 ஆவலாதி - Complaint (புகார்)
669 உகந்துடைமை -    அன்பின் காரணமாகவருவது, அல்லது
அன்பின்  வழி வந்தது என்பது பொருள் முன்னோர்களின்
சொத்துக்களைப்     பங்கிட்டுக் கொள்ளும்பங்காளர்களின்
பழைய வழக்கத்தின்  நினைவுச்   சின்னம் உகந்துடைமை.
மகனுக்குக் கொடுக்கப்பட     வேண்டிய பரம்பரைச்சொத்து
உகந்துடைமை எனப்படும். உகந்துடைமை என்பது சட்டப்படி
மக்களின் உரிமை சார்ந்து  கொடுக்கப்படுவது (நாகர்கோவில்
கோர்ட் - செல்லப்ப பிள்ளை நீதிமன்றத் தீர்ப்பு எண் 42 :
1049)
தந்தை இறக்கும் போது     இறப்புச் செலவிற்காகப் பணம்
கொடுக்கப்படும்.இறந்தவரின் மக்களுக்கு உரிமை உடைமை.
இது யாப்பிய உகந்துடைமை எனப்படும்.
காலஞ்சென்ற காரணவரின் மக்களுக்கு அனந்திரவன் மனமுவந்து கொடுப்பது உகந்துடைமை.
காலஞ்சென்ற காரணவரின்   (குழந்தையில்லா) மனைவிக்கு
அனந்திரவன் கொடுப்பது நங்குடைமை
நங்குடைமை என்பது பெண்ணுக்குக் கிடைக்கும் சொத்து.
குழந்தை இல்லாத விதவைக்குக் கொடுக்கப்படும் உதவித்
தொகை.
669-71 இங்கு காரணவன் தன் மனைவிகளுக்கும், குழந்தைகளுக்கும்
நியாயமாய்ப்        போய்ச் சேரவேண்டிய சொத்துக்களை
இல்லாமலாக்கியதை வருத்தத்துடன் கூறுகிறார்.
672 குசும்பன் -      கோள் சொல்பவன்; கிண்டலாகக் கோள்
சொல்பவன் குண்டுணி - கோள் கூறி சண்டை மூட்டுபவன்.
678 செருப்பாலடித்த காசு-வழக்கில் தோற்கடிக்கப்பட்டு நீதிமன்றச்
செலவைத் தருமாறு தீர்ப்பு, பெற்றுவிட்டால்,    அச்செலவுப்
பணத்தைக் கொடுக்காவிட்டால்      தண்டிக்கப்பட நேரிடும்
என்ற குறிப்பு.
680 வட்டி முடையட்டும் - முன்குறித்த பணத்தைக் கொண்டு செல்ல,
ஓலைப் பெட்டியை இப்போதே செய்யட்டும் என்பது குறிப்பு.
682-712 காரணவர் வயலைப் பயிரிட்டு, தன் சகோதரியின் கணவருக்கு
நெல்லைக்கொண்டு செல்லும்    சாதாரண வழக்கம் கிண்டல்
செய்யப்படுகிறது.        காரணவரின்   மைத்துனரோ எந்த
வேலையையும்         செய்யாமல் சோம்பேறியாக வாழ்வது
குறிப்பிடப்படுகிறது.