685 | வீசித் தூற்றி - ஈரமும் பதரும் இல்லா தகற்றுது; வயல் அறுத்து கதிரைச் சூடடித்து, நெல்லைத் தூசின்றிப் பிரித்து காயவைத்து, பதரைப் பிரித்து எடுப்பது. |
688 | ராஜா- இங்கு மருமகன் எதிர்பார்க்கும் ராஜபோகம் கிண்டல் செய்யப்படுகிறது. |
690 | கொட்டாரம் - அரண்மனை; கிண்டலாக |
695 | நாயும் புலியும் - ஒருவகை நாட்டார் விளையாட்டு; இதில் நாயைக்குறிக்க பதினைந்து சிறுகற்களும், புலியைக் குறிக்க மூன்று பெரியகற்களும் வைக்கப்பட்டிருக்கும். |
| நடுமனை கீறுதல் - நாயும் புலியும் விளையாட்டு விளையாடுவதற்குரிய வரை படம் வரைதல் |
696 | இஷ்டர்கள் - நண்பர்கள் |
699-700 | காரணவரின் மருமகனின் நிலை. கிண்டலாகக் காட்டப்படுகிறது. |
700 | இறக்கு வெட்டு - சீட்டு விளையாட்டில் உற்சாகத்தில்பேசப்படும் பேச்சுக்கள் |
702 | பக்க மந்திரிகள் - உடன் அமர்ந்திருக்கும் நண்பர்கள். |
703 | சீட்டுக் கச்சேரி - சீட்டு விளையாட்டை ஒரு இசைநிகழ்ச்சியாகக் கிண்டல் செய்கிறார் ஆசிரியர் |
| கச்சேரி - ஆடல்பாடல் முதலியவற்றிற்காகக் கூடும் கூட்டம் |
705 | தாயப்போர் - தாயம் என்னும் நாட்டார் விளையாட்டு; சூதுக்காய் கொண்டு உருட்டும் விளையாட்டு |
706 | குடித்தனம் - இங்குகள் அல்லது சாராயம் குடித்திருக்கும்வேளை குறிகள் - அடையாளங்கள். சமயம் |
707 | தடித்தனம் - மிகுந்த கோபத்துடன் இருக்கும் வேளை |
708-711 | கடவுளுக்குப் படைக்கப்படும் நிவேதனத்தைப் போன்றது, மருமகளுக்குக் கொடுக்கப்படும் நெல்லும் எனப் பரிகாசம் செய்யும் பகுதி. |
710 | கற்பனை பாவித்து - மன்னர் ஆணை ஏற்றுக்கொண்டு |
725 | கொத்து - வயல் அறுவடை செய்த பணியாளர்களுக்குக் கொடுக்கும் கூலி நெல் |
726 | போனபூ - முந்திய பருவப்பயிர் |
727 | வட்டம் தள்ளுதல் - போரடித்தல்; வட்ட வடிவமாகப்போடப்பட்ட கதிரின் மேல் மாடுகளை ஓட்டுதல் (ஓட்டி மிதித்தல்) |