பக்கம் எண் :

520கவிமணியின் கவிதைகள்

Untitled Document
728 களம் - நெற்களம்; வீட்டின் பின்புறம் நெற்கதிரைப்போரடிக்கும் இடம்
கண்காணி - மேற்பார்வையாளர்
730 அரைக்கோட்டை - 10லு மரக்கால்
731 கடத்துதல் - கவர்ந்து செல்லுதல்
734 விசாரிப்புக்காறன் - காரணவரின்    வீட்டில் குற்றேவல்
செய்பவன்;இவன் வீ்ட்டின் பொறுப்பான வேலைகளையும்
செய்வான்;
735 சாக்கு - கோணிப்பை; நெல்களவு    கொண்டு போன
சாக்கைக் குறிப்பது
736 இருபதாம் நம்பர் ஷாப்பு - கள்ளுக் கடைகளுக்கு
அரசுவழங்கும் உரிம எண் :
741 செப்பில் - மரம் அல்லது உலோகத்தால் ஆன சிமிழ்
திருக்குப் பூ - பெண்களுக்குரிய கூந்தல் அணி.
742 இரண்டாம் குடியாள் - கோவிலில் நடனமாடும் தேவதாசியர்;
நாஞ்சில் நாட்டு தேவதாசிகளின்  குடியிருப்பை எண்களால்
குறிப்பதுவழக்கு; ஒவ்வொரு கோவில் ஊருக்கும் இந்த எண்
மாறும் ‘இரண்டாம் குடி’ -    புழுக்க வேளாளப்  பரத்தை;
ஊருக்குப் புறத்தே உள்ள வீட்டில் குடியிருப்பவள் என்றும்
பொருளுண்டு.
747 காரியம் - குடும்பக் காரியம்
750 பிடாகை உட்பிரிவு; நாஞ்சில் நாட்டின் எல்லை மங்கலம் முதல்
மணக்குடி வரை என்பது மரபு; இதன் 12  பிரிவுகள் காலத்துக்குக் காலம் மாறவும் செய்திருக்கிறது.   ‘பன்னிரண்டு பிடாகைகளிலும்என்னைப்போல் கிடையாது’ எனப் பெருமை பேசும் வழக்குஇன்றும் உள்ளது.
மேல் பிடாகை
நடுவுப் பிடாகை
அழகிய பாண்டியபுரம் பிடாகை
அனந்தபுரம் பிடாகை
தாழக்குடிப் பிடாகை
தோவாளை பிடாகை
படப்பற்றுப் பிடாகை
கோட்டாற்றுப் பிடாகை
பறக்கைப் பிடாகை