பக்கம் எண் :

522கவிமணியின் கவிதைகள்

Untitled Document
821 அறுப்புகாலம் - அறுவடைக் காலம்
822 நாலாம் மனைவி நாடகக்காரி - காரணவரின் மனைவி; இவள்
கோவிலுடன் தொடர்புடைய தேவதாசிகுலத்தைச் சார்ந்தவள்.
823 வித்துத்தண்டு - விளைந்த வாழைத் தண்டு / தண்டங்கீரை
வாளைமீன் - ஒருவகை கடல்மீன்;
824 மொச்சைக்கொட்டை - மொச்சை என்னும் தானியம்
825 வட்டி - பனை ஓலைப் பெட்டி
826 கறிகள் - கூட்டு
கஞ்சி - சோற்றுப்பருக்கை உடைய நீராகாரம்
828 அரைஅரை - கொஞ்சம் கொஞ்சமா
அகப்பை - குழம்பு, கறிவகைகள் முகருவதற்குப்பயன்படும்
மரம் அல்லது கொட்டாங்கச்சியால் ஆன கருவி
834 அப்பமுத்து - பொதுவாக மடையன் மூடன் என்பதைக் குறிக்கப் பரிகாசமாகச் சொல்லும் பெயர்
835 கொட்டுக்குடவை - புட்டு அவிக்க உதவும் சிறிய மண்பானை
836 குறுணி - ஒரு மரக்கால்
837 விசாரித்து - நன்றாகக் கேட்டு அறிந்து
839 சாளையும் ... கறிவாயோ
841 சாளை - சாளை மீன்; இந்த மீனில் முள் அதிகம் இருக்கும்;
அதனால் முள்ளை      மெதுவாக எடுத்துத் தான் சாப்பிட
முடியும்.  எனவே    சாப்பிடும் நேரம் அதிகமாகும். இந்த
நேரத்தில் சாப்பிடுபவரின் மனைவி, களஞ்சியத்தில் கிடக்கும்
நெல்லைத் திருட்டுத்தனமாக       விலைக்குக் கொடுத்துப்
பணம்சேர்ப்பாள்   என்பது நாஞ்சில் நாட்டில் வழக்கமாகக்
கூறப்படும் கிண்டலான செய்தி.
சண்ணும் - நிறையவே சாப்பிடுகின்ற
சப்பா - எதற்கும் லாயக்கற்றவன்
845-870 (1914-1919) முதல் உலகப்போரைக் குறிக்கும் செய்தி இங்கு
குறிக்கப்படுகிறது
859 பென்னம் பெரிய - மிகப் பெரிய
870 இக்காலம் தன்னில் - மருமக்கள்வழி மான்மியம்
நிகழுமகாலமும்;முதல் உலகப் போர்க்கலமாகக் கொள்ளலாம்.