உலகப்போர் 1914-19ல் நடந்தது. மான்மியமும் இதே காலத்தில் வெளியானது. ஆனால் பழைய ஏட்டிலிருந்து எடுத்ததாகக் கற்பனை செய்து வெளியிடப்பட்டதை இங்கு நினைவில் கொள்ளலாம். |
892 | குடவண்டி - தொந்தி; தொப்பை |
| குடவண்டியைக் கலக்குவேன் - நாஞ்சில் நாட்டு வழக்காறு |
899 | வையவைய - திட்டத் திட்ட; ஏச ஏச |
| திண்டுக்கல் - அசையாது இருக்கும் கல்; வீட்டு முன் திண்ணையில் உள்ள கல் |
| கோடேறிக் குடிமுடித்த படலம் |
905 | ஏழரை ஆண்டைச் சனியன் - ஒருவரின் வாழ்வில் 7லு ஆண்டுகள் சனிபிடிக்கும் என்பது சோதிட நம்பிக்கை, எனவே, அடுத்தவரைச் சனியன் எனத் திட்டுவது வழக்கு. |
914-15 | நான்று - நாக்கைப் பிடுங்கி; மானம் கெட்ட பின்பு நாக்கைப் பிடுங்கிச்சாகவேண்டும் என்று கூறும் வழக்கு நாஞ்சில் நாட்டில் உள்ளது; வில்லிசைப்பாடல்களும் இதைக் கூறும். |
| நான்று - தூக்குப் போட்டு |
917 | சங்கிலித் துறை - கன்னியாகுமரி கடலில் தீர்த்தமாடும் இடத்தை அடுத்துள்ள ஆழமான ஓரிடம். தீர்த்தமாடுவோர், அலைகளால் இழுத்துச் செல்லாமலிருக்க இரும்புச் சங்கிலி போடப்பட்டிருப்பதால் அத்துறை சங்கிலித்துறை எனப் பேச்சுவழக்கில் வழங்கப்படுகிறது. பிறரைப் பரிகாசமாகவேனும், கோபமாகவேனும் ‘சங்கிலித் துறையில் போய்ச்சாடு’ எனக் கூறும் வழக்கு இன்றும் உள்ளது. |
922 | வாயில் மண்ணை வாரியடித்து - ஒருவர் ‘வாயில் மண்ணைப் போட்டு சுடுகாட்டுக்கனுப்புவேன்’ என்பது வழக்காறு. |
928 | புகையும் போட்டான் - கோள்மூட்டினான்; சாம்பிராணிப் புகை போட்டான் என்று கூறும் வழக்கு இன்றும் உள்ளது. |
930 | அண்டை வீடு - பக்கத்து வீடு |
932 | கோட்டு மாடன் பிள்ளை - மாடன்பிள்ளை என்பவரின் அடை மொழி ‘கோர்ட்டு’ (Court) எனக் கூறலாம். |
935 | பானையில் கிடந்த பழவோலை-சொத்து பிரமாண ஓலைகளைப் பானையில் வைத்திருக்கும் வழக்கம் நாஞ்சில்நாட்டில் இருந்தது. |