பக்கம் எண் :

524கவிமணியின் கவிதைகள்

Untitled Document
937 முறிப்பெட்டி - ஓலைப் பிரமாணங்களைக் காப்பாற்றி
வைப்பதற்குள்ள பெட்டி; முறி - ஓலைப் பிரமாணம்
முன்னோலை - பழைய பிரமாணங்கள்
938 கைச்சீட்டு - கடன் சீட்டு - அடமான ஓலை; கடன்
வாங்கியதற்குக் கொடுத்த ஓலை - கையால் எழுதிக்
கொடுத்தது.
939 கைச்சாத்து - கையால் எழுதிக் கொடுத்த பற்றுச்சீட்டு
பொய்ச்சாத்து - பொய்யான பற்றுச்சீட்டு
940 பத்திரச்சுருள், பகர்ப்புச் சுருள்
ஓலைப் பத்திரங்களைச் சுருணை    என்பது வழக்கு. தாளில்
எழுதப்பட்ட பத்திரங்களை அப்படியே வைக்காமல்,அவற்றைச்
சுருட்டி மூங்கில் குழாய்களில் வைத்திருப்பதால் பத்திரச் சுருள்
எனப்பட்டது.
பகர்ப்பு - நகல்; இதுவும் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்.
942 சுமடாய் கட்டி - தலையில் தூக்கிச் செல்ல வசதியாகக் கட்டி
942 முண்டு - வேட்டி
மூடிப் பொதிந்து - பெரிய வேட்டியில் பத்திரங்களைக் கட்டி
944 நாகையம் பதி - நாகர்கோவில்
951 விவகாரங்கள் - வழக்குகள்
955 அண்டப்புரட்டன் - உலகப்   பொய்யன்; ஒரு வழக்குரைஞனின்
பட்டப் பெயர்
956 ஆனைப் பொய்யன் - ஒரு பட்டப் பெயர்;
குமஸ்தா - வழக்குரைஞரின் எழுத்தர்.
960-964 காரணவரிடமிருந்து தப்பி நீதி மன்றத்திற்குப் போவதைத்,தேரைப் புற்றிலிருந்து புறப்பட்டு, பட்டினி       கிடந்த பாம்பின் வாயில்
விழுவதுபோல என உவமை கூறுகிறார்.
967 நோட்டு - பிராமிசரி நோட்டு;  கடன் பத்திரம்காரணவரை
எதிர்த்து அவரது மைத்துனன்      வழக்குப் பேசுவதற்கு
வழக்குரைஞருக்குக்     கூலி கொடுக்க வசதியில்லாததால்
வழக்குரைஞரின் மைத்துனனிடம் 150        ரூபாய் கடன்
வாங்கியதாகக் கடன்  பத்திரம் எழுதிக் கொடுத்த நிகழ்ச்சி
இங்கு கூறப்பட்டுள்ளது.
971 வெள்ளமடம் - நாகர்கோவிலிருந்து திருநெல்வேலிச் சாலையில்
5 கி.மீ. தொலைவில் உள்ள ஊர்.
கள்ளபிரான் என்னும் மூத்தபிள்ளை - மூத்தபிள்ளை என்பவரின் பட்டப்பெயர