1223 | வஞ்சி - கோவிலில் காணிக்கை செலுத்தும் உண்டியல் பெட்டி வஞ்சியை முறித்தல் - உண்டிப்பெட்டியை உடைத்தல்; திருட்டுத் தொழில் வல்லவனை, ‘வஞ்சியை முறித்த கள்வன்’ என்பது மரபு. |
1225 | கிராஸ் - குறுக்கு விசாரணை Cross |
1229 | அண்டப் புரட்டனை - உலகத்தையே புரட்டி எடுக்கும் வக்கீல் |
1235 | தக்கில் - தாழ்ந்த குரலில் |
1254 | குண்டில் - குழியில் |
1257 | ஈரங்கி - வழக்கு வேட்கை Hearing |
1260 | ஏழரை நாட்டான் Eardley Norton என்னும் பிரசித்தி பெற்ற ஆங்கிலேயே வழக்குரைஞர். பாமரமக்கள் இப்பெயரை உச்சரிக்கும்போது ஏழரை நாட்டான் என்பர்.நாஞ்சில் நாட்டில், நாட்டான் என்னும் பட்டப் பெயருள்ளவர்கள் இருந்தனர். இவர்கள் எதற்கும் விவாதம்செய்பவர்கள். |
1265 | வரிக்கல் - நீளமாக அடித்துத் திருத்திய கல் |
1269 | வருக்கை - பலா பழவகை |
1270 | பெட்டிப்பால் Milk Powder; பெட்டியில் இருக்கும் பால்பொடி பிஸ்கூத் Biscuit |
1277 | வாசறை மீண்டான்-வாரிசிறை மீண்டான் என்றும் நெல்வகை; நாஞ்சில் நாட்டுத் தளபதி ஒருவனை நெல்லைச் சீமை படைத்தலைவன் சிறைஎடுத்துச் சென்ற போதுநாஞ்சில் நாட்டுமக்கள் பெரும் அளவு நெல் கொடுத்து அந்தத் தளபதியை மீட்டார்களாம். பின் அந்த நெல்வாரிசிறை மீண்டான் என்று பெயர்பெற்றது என்பது வாய்மொழி வழக்காறு. |
1278 | சம்பா - ஒரு வகை நெல் |
1280 | விலங்கினம் - ஆடுமாடு பன்றி போன்றவை |
1291 | முக்குளி - நீரில் மூழ்கும் செயல் |
1294 | முழுக்காளி - முத்துக்குளிப்பவன் |
1320 | அத்தாரிட்டிகள் - அத்தாட்சி, ஆதாரம் authorities |
1328 | பதிவுசாட்சி - பணம் வாங்கிக் கொண்டு முன்பின் தெரியாத எந்தப்பத்திரத்திலும் சாட்சிக் கையெழுத்து போடவும், சாட்சி சொல்லவும் தயாராய் இருப்பவன். |
| பலவேசம் பிள்ளை - பலவேசம் என்பதைச் பலவேடம் தாங்கிய பிள்ளைஎன்றும் கொள்ளலாம். இவர் யாருக்கு வேண்டுமானாலும் பணம் பெற்றுக் கொண்டு சாட்சி சொல்லுவார் |