பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு533

Untitled Document
1510 முதலை - தன்கைப் பொருளை
1515 கூடப்பிறந்து உயிர் கொள்ளும்    வியாதி - உடன் பிறந்தே
கொல்லும் வியாதி
1519 ஐயா - தந்தை; (இங்கு காரணவரின் மைத்துனன்)
1525 கைவிஷம் - கணவனைத்       தன்வசம் வைப்பதற்காகக்
கொடுக்கப்படும் வசிய மருந்து
1536 பொட்டணம் - மூட்டை முடிச்சு
1537 புழக்கடை - புறக்கடை
1543 கட்டம் கட்டி - ஏற்பாடு செய்து
1550 அந்திய காலம் - இறுதிக்காலம்
1551 குடுக்கை - சிறிய மண் பாத்திரம்
1553 அன்னப்பால் - உலையில் உள்ள கொதிநீர், கஞ்சி
1557 ஈனாப்பேய்ச்சி - குழந்தை பெறாத நிலையில் இறந்த கர்ப்பிணி
பேயாக மாறுவாள்; அவளை ஈனாப் பேயச்சி என்பது மரபு
1570 பண்ணைவீடு-நிறைய வயல்கள் உள்ள ஒரு செல்வந்தரின் வீடு
1573-
77
நாஞ்சில் நாட்டில்         பள்ளிகளில் தமிழ் முக்கிய பாடமாக
இருக்கவில்லை.
1597 குச்சுக்கடை - மலிவுவிலைப் போலிப் பொருட்கள் விற்கப்பெறும்
சிறிய கடை
1611 உமையொருபாகத்தேசிகன் - கவிமணிக்கு சிவதீட்சை செய்து
வைத்த பெரியவர்.இவரது மடம் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்தது.
நாஞ்சில் நாட்டிலும் தேரூர், மற்றும் சில கிராமங்களில்
இருந்தன. இவரைப் பற்றிய கவிமணி பாடல் (எண். 38)
உள்ளது.
1613 கண்டிகை - உருத்திராட்ச மாலை
1614 உலந்து பழுத்த - துவைத்துப் பழுப்பேறி உலர்ந்த (உடை)
1621 பாட்டா - தாத்தா
1626 பற்பல பதிகம்-திருவாசகப் பாடல்களைப்பதிகம் எனக் கூறும்
வழக்கு இல்லை; இக்காவியத்தைக் கூறும் பெண் அறியாமல்
கூறுவது இது
1630 பூவார் சென்னி மன்னன்எம்
     புயங்கப்பெருமான் சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்துணர்வாய்
     உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டு அன்பாய்
     ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட்டுடையான் கழல் புகவே;