யாத்திரைப்பத்து - திருவாசகம் கும்பி எரிச்சல் படலம் |
1635- 1649 | ஏட்டில் பொடிந்த வரிகள் |
1656 | தரிக்க வொட்டா - தொடர்பு இல்லாமல் ஆக்குவது |
1670 | நெரிஞ்சில் - நெரிஞ்சிமுள் எனும் செடி.இது படர்ந்து கிடக்கும் இடத்தில் நடந்து செல்ல முடியாது |
1685 | குழியல் - சாப்பிடப் பயன்படுத்தும் பாத்திரம் குடிக்கும் செம்பு - தண்ணீர் குடிக்கும் பாத்திரம் |
1688 | காப்பு - வளை என்னும் ஆபரணம் |
1689 | பதக்கம் - சரடு முதலியவற்றில் கோக்கப்படும் கல்லிழைந்த தொங்கல் கழுத்தணி |
| சிற்றுரு - கழுத்தணி |
| பாம்படம் - வயதான பெண் காதில் அணியும் எடை கூடியஅணி |
| பீலி - கால் விரலில் அணியும் வெள்ளி அணி |
1705 | பக்கப் பழுத்த - மிக வயதாகி உடல் பழுத்த |
1706-08 | ஊரும் சதகமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற பேரும் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளும் சீரும் சதமல்ல செல்வம் சதமல்ல தேசத்திலே யாரும் சதமல்ல நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே பட்டினத்தார் |
1709-10 | தோவாளைக் கஞ்சிப்புரை -நாஞ்சில் நாட்டில் நாகர்கோவில் திருநெல்வேலி சாலையில் 12கி.மீ.தொலைவிலுள்ள ஊர் தோவாளை.இங்கே திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மாவால் (1728-59) நிறுவப்பட்ட கஞ்சிமடம் இருந்தது. இதில் ஏழைகளுக்கு எந்தநேரத்திலும் கஞ்சி இலவசமாக வழங்கப்பட்டது. |
1712 | சுவான தேவர் - நாய்கள் |
1714 | காக்கை பாடினியார் - காகங்கள் |
1715 | பழ அடியார்கள் - பிச்சைக்காரர்கள் |
1716 | வெண்சோறு, பட்டைச் சோறு, பாற்சோறு வெண்சோறு - தொட்டுக்கொள்ள எதுவுமில்லாத சோறு மட்டும் பட்டைச்சோறு - கோவில்களில் வழங்கப்பட்ட கட்டிச்சோறு பாற்சோறு - பாலில் வேகவைக்கப்பட்ட சோறு |
1718 | ஒட்டுத் திண்ணை-அடுத்தவர் வீட்டு வாசலில் உள்ள திண்ணை |