பக்கம் எண் :

66கவிமணியின் கவிதைகள்

Untitled Document
437 அன்பர் படுக்கையுமவ் வாகாய மீதேயாம்;
என்றன் படுக்கையுமிங்கு ஈட்டிகளின் மேலேயாம்;
வன்பில் விதி எனக்கு வகுத்தவழி ஈதானால்
இன்ப நலமெல்லாம் எவ்வா றடைவதம்மா!

438 நீடும் மனத்துயரை நீக்கும் மருத்துவனை,
நாடும் நகர்ப்புறமும் நான்கு திசையுமுள்ள
காடும் மலையிடமும் கானற் பெருவெளியும்
தேடி யலைந்தலுத்தேன்; தெரியநான் கண்டிலனே.

439 தள்ளற் கரியாள், தமியள் இவளென்ற என்
உள்ளங் கவர்ந்த ஒருவன், எதிர்நின்று
வள்ளத் தமுதம் வழங்க வரினல்லால்,
எள்ளத் தனையும் என்துயரம் நீங்கிடுமோ?

4
     (மீராவின் துயரத்தைக் கண்ட   போஜராஜன் அவள்
விருப்பத்தை நிறைவேற்றக் கருதி,    அரண்மனையிலேயே
கிரிதாரிக்கு ஒரு கோயில் கட்டுவித்தான்.   கும்பாபிஷேகம்
தினத்தன்று மீரா வந்து பஜனை செய்கிறாள்)

440 வானெங்கும் மழையிருண்டு கவிந்தது; அன்பர்
     வந்தின்று மனையகத்தே தங்கு கின்றார்;
ஆனசிறு சிறுதுளியாய்த் தூற்றித் தூற்றி,
     ஆனந்தப் பேரேரி நிறைந்தது அம்மா!
ஈனமறப் பலநாளின் பிறகிந் நாளே,
     என்விழிகள் அவர் முகத்தைக் கண்டு அம்மா!
யானுமுளம் பித்தேற இன்னும் கைவிட்டு
     ஏகுவரோ! என்றுமிக நடுங்கி னேனே.

5
     (ஹரிபஜனையில் ஈடுபட்டிருந்த மீரா தன் நாயகனிடம்
அன்பு      செலுத்த இயலவில்லை. இதனால் போஜராஜன்
கவலையுற்றிருக்கிறான்.இதனிடையில், ஒரு       நாள் மீரா
நைவேத்தியத்தை     விக்கிரகத்தின் முன் வைத்து, அதை
உண்ணும்படி வேண்டுகிறாள்)

441 விதம்விதமாய்ப் பண்டங்கள் செய்து வைத்தேன்;
     விண்ணமுத மெனக்கறிகள் சமைத்து வைத்தேன்;