பக்கம் எண் :

68கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  நம்பன் கண்ணன் அழகியவோர்
     நடனாய் வந்து நடிக்கின்றான்;
உம்பர் தொழும் அவ் வுத்தமனின்
     உவமை காணா உறுப்பழகுக்கு,
இம்பர் எளியேன் அர்ப்பணமாய்
     என்னை இன்று வைத்தேனே.

7

     (இதைக் கேட்டு, போஜராஜன் கவலையிலாழ்கிறான். தேவி
அவன் கனவிலே தோன்றி,    காலக்கிரமத்தில் மீரா அவனிடம்
அன்புடையவளாவாளென்றும்; அதுவரையில்     பொறுத்திருக்க
வேண்டுமென்றும் கூறுகிறாள். அவன்    ஒருவாறு தேறி, தானும்
விஷ்ணு சேவையில் ஈடுபடுகிறான். இடையில், மீரா  மதுயாமினி
விரதத்தை மேற்கொண்டு        தெருக்களில் பஜனை செய்யத்
தீர்மானிக்கிறாள். அவள் மைத்துனியாகிய ஊதாபாய்  வெகுண்டு
தடுத்தும் மீரா கேட்காமல் உறுதியாயிருந்து பாடுகிறாள்:)

வேறு

445   என்றுமே கிரிதரனை யன்றி, வேறிங்கு
     ஏதுமொரு துணையறியேன்; எழுந்து முன்னம்
குன்றுயர்த்த கோமானே வணங்குந் தெய்வம்,
     குலப்பெருமை குடிப்பெருமை எல்லாம் விட்டேன்;
நன்றுதருந் திருக்கூட்டம் நாடிச் சார்ந்தேன்;
     நாணிழந்தேன்; எவரையும் நான் மதிக்க மாட்டேன்;
துன்று கண்ணீர் விட்டு, அன்புக் கொடிவளர்த்தேன்;
     சுகமென்னுங் கனியையது தந்தது; அம்மா!

446   பத்தரெலாம் இதுகண்டு மனம கிழ்ந்தார்;
     பாமரரே அறியாது வருந்தி நின்றார்;
நித்தமுமே மீராநின் அடிமை யானாள்;
     நீஅவளை ஆண்டருள வேண்டும்; ஐயா!
அத்தியிடர் காத்தபெருங் கருணை யாளா!
     அரவணைமேல் துயில்கொள்ளும் ஆதி நாதா!
சித்தமிசை குடிகொண்ட ஞான ரூபா!
     தேவகியின் திருமைந்தா! தேவ தேவா!

         (மீராவின் செயல்களால் வெறுப்புற்ற போஜராஜன் அவளை
நாட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுகிறான். காட்டின்  வழியே
மீரா பாடிக் கொண்டு செல்கிறாள்:)