முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 69 |
Untitled Document
447 | | எத்திசையும் மேகங்கள் எழுந்து மின்னி, இடிமுழங்கிப் பெருமழையும் பெய்யக்கண்டோம்; தத்திவரும் குளிர்வாடை வீசக்கண்டோம்; தவளையொடுசாதகமும் கத்தக் கண்டோம்; சித்தமகிழ் பூங்குயிலும் கூவக் கண்டோம்; ஸ்ரீநந்த குமரன்வர இன்னுங் காணோம் ; பத்தியொடு பணிகின்றேன் ; கிரித ரா ! உன் பாதமலால் வேறுதுணை அறியேன் ; ஐயா ! |
| | (மீரா காட்டுவழியே சென்று தந்தையின் இல்லமடைந்து, அங்கிருந்து தீர்த்த யாத்திரை செல்கிறாள். கூர்ஜர தேசத்தில் சாது ரவிதாசரைக் கண்டு பணிகிறாள். கணவனை வழிபடுமாறு அவர் கூறிய அறிவுரைகளை அவள் ஏற்கவில்லை. அவர் முன்னிலையில் மீரா பகவானைத் துதிக்கிறாள்:) |
448 | | காசியிலே இறப்பதனால் பயனொன்று இல்லை ; காஷாயம் தரிப்பதொரு வேஷ மேயாம் ; ஆசையினை வேருடனே அறுக்க வேண்டும் ; அழியுமுடல் அபிமானம் அகற்ற வேண்டும் ; பேசுலகில் அழியாத பொருளொன்று இல்லை ; பெரியவர்க்கும் சிறியவர்க்கும் மரணம் ஒன்றே ; பாசமுறு சம்சாரம், அந்தி யோடு பறந்தகலும் பறவைவிளை யாட்டை யாமால், |
449 | | முத்திநெறி நாடாது, யோகி யாகி மூச்சடக்கி இருப்போர்கள், பின்னும் பின்னும் இத்தரையில் வந்துபிறந்து இறத்தல் திண்ணம்; இவ்வுண்மை எந்நாளும் பொய்ப்ப தில்லை; பத்தியொடு கைகூப்பிப் பணிகின் றேன்; உன் பாதமலால் வேறுதுணை யொன்றும் இல்லை; நித்தியனே! யமபாசம் அண்டாது, என்னை நீஆண்டு காத்தருள வேண்டும்; ஐயா! |
| | (ரவிதாசர் அவள் பாடிய பாடலின் கருத்தை அவளுக்கு விளக்கிக் கூறி, ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதே கடமை என்று மீண்டும் போதிக்கிறார். அவள் அதை உணர்ந்தும், அவள் மனம் சம்சாரபந்தத்தில் கட்டுப்படவில்லை. கண்ணனுடைய பிரிவை எண்ணி வருந்திப் பலமுறை பாடுகிறாள்:) | |
|
|