பக்கம் எண் :

70கவிமணியின் கவிதைகள்

Untitled Document
450 இரவுபகல் எப்பொழுதும் உன்னைக் காணாது,
     இருக்கமனம் வருவதில்லை; ஐயா! நீதான்
வரும்வழியில் முகம்வைத்து, மேடை நின்று,
     மாலையாய்க் கண்ணீரும் வடித்து நிற்பேன்,
'உரியகுலம் குடியாவும் மாயை' என்னும்
     உண்மையினை உள்ளபடி உணர்ந்து கொண்டேன்;
குருமொழியில் மனப்பேயை அடக்கி, உன்றன்
     குரைகழலே தஞ்சமெனக் கும்பிட்டேனே.

451   கண்ணுமுனைக் காணாமல் கலக்கங் கொள்ளும்;
     கணமேனும் உள்ளத்தில் அமைதி யில்லை;
உண்ணுதற்கும் பசியில்லை; உறக்க மில்லை;
     ஓரிரா ஓர்யுகமாய்க் கழியுது; ஐயா!
நண்ணிஎனை வாள்போல அறுக்கும் இந்த
     நலிவையெலாம் யாவரிடம் சொல்லி நிற்பேன்?
எண்ணிஎண்ணி நைந்துருகும் என்னை யாள,
     எந்நாளிங் கெழுந்தருள்வாய்? எம்பிரானே!

   
11

     (ஒரு முறை சமாதி நிலையில்   கண்ணனுடைய  தரிசனம்
கிடைக்கப் பெற்றபோது பாடுகிறாள்:)

வேறு

452   கார்முகிலின் மேனிபெறும் நந்தகுமரா! - என்றன்
     கண்களிலே குடியிருப்பாய்; நந்தகுமரா!
மார்பினிலே வைஜயந்தி மாலையணியும் - உன்றன்
     வடிவினிலே மயங்கிநின்றேன்; நந்தகுமரா!
ஆரமுத மூறுமிதழ் மீதிலமரும் - குழல்
     அழகினுக்கோர் அளவுமுண்டோ? நந்தகுமரா!
சேருமணி யாடரைஞாண் பாதசதங்கை - ஒலி
     செய்திடவே வந்தருள்வாய்; நந்தகுமரா!
பாரும் விண்ணும் பணிந்து தொழும் நந்தகுமரா! - என்றும்
     பத்தரையாள் ஈசன்நீயே! நந்தகுமரா!

12

     (சமாதியில் கண்ட கண்ணன் திருமுகம்     மீராவுக்கு தன்
கணவனை ஞாபகப்படுத்திற்று. அப்பொழுதே தன்    கடமையை
உணர்ந்து,